Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/ராமநாதபுரம்/ஜாமின் கொடுத்தவர்களுக்கு ரூ.5,000 அபராதம்

ஜாமின் கொடுத்தவர்களுக்கு ரூ.5,000 அபராதம்

ஜாமின் கொடுத்தவர்களுக்கு ரூ.5,000 அபராதம்

ஜாமின் கொடுத்தவர்களுக்கு ரூ.5,000 அபராதம்

ADDED : செப் 17, 2011 09:57 PM


Google News

திருவாடானை : தொண்டி அருகே சின்னதொண்டியை சேர்ந்தவர் கோட்டைசாமி,51.

அதே கிராமத்தை சேர்ந்தவர் தர்மர்,21. கடந்த ஊராட்சி தேர்தலின் போது ஏற்பட்ட தகராறில் தர்மர் மற்றும் சிலர் கோட்டைசாமியை தாக்கினர்.

இதன் வழக்கில் தர்மருக்கு அதே கிராமத்தை சேர்ந்த முருகன், தொண்டிமுத்து ஆகியோர் ஜாமின் கொடுத்தனர்.

ஜாமினில் வெளியே வந்தபின் தர்மர் வெளிநாடு சென்று விட்டார். விசாரணைக்கு நீண்ட நாட்களாக தர்மர் ஆஜராகாததால், அவருக்கு ஜாமின் கொடுத்த முருகன், தொண்டிமுத்துவிற்கு தலா ஐந்தாயிரம் ரூபாய் அபராதம் விதித்து திருவாடானை மாஜிஸ்திரேட் நம்பி உத்தரவிட்டார்.







      Our Apps Available On




      Dinamalar

      Follow us