Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/தேனி/சிறுமியை கடத்தியவருக்கு ஏழு ஆண்டு ஜெயில்

சிறுமியை கடத்தியவருக்கு ஏழு ஆண்டு ஜெயில்

சிறுமியை கடத்தியவருக்கு ஏழு ஆண்டு ஜெயில்

சிறுமியை கடத்தியவருக்கு ஏழு ஆண்டு ஜெயில்

ADDED : ஜூலை 13, 2011 10:33 PM


Google News

தேனி : சிறுமியை கடத்தியவருக்கு ஏழு ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.

தேவாரம் அருகே டி.பொம்மிநாயக்கன்பட்டியைச் சேர்ந்த இன்னாசி மகள் சகாய கலையரசி (9). டி.சிந்தலைச்சேரியை சேர்ந்த ஆரோக்கியம் (35), கடந்த ஆண்டு மார்ச் 18ல் வாயை பொத்தி ஓடைப்பகுதிக்கு தூக்கிச் சென்றார். அவருடன் சென்ற சினேகா கூச்சலிட்டதால் அந்த வழியாக வந்த ஆசிரியர் திரவியம், ஆசிரியை மேரி ஆகியோர் உதவிக்கு வந்தனர். இதனால் ஆரோக்கியம் தப்பி ஓடி விட்டார். தேவாரம் போலீசார் ஆரோக்கியத்தை கைது செய்தனர். தேனி தலைமை குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் வழக்கு நடந்தது. கடத்தல் முயற்சி, குற்றம் செய்ய முயற்சி செய்ததற்காக, ஆரோக்கியத்திற்கு ஏழு ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிபதி ராஜலட்சுமி தீர்ப்பு கூறினார்.









      Our Apps Available On




      Dinamalar

      Follow us