/உள்ளூர் செய்திகள்/திருநெல்வேலி/நான்குநேரியில் அனைத்து ரயில்களும் நின்று செல்ல கோரி மனுநான்குநேரியில் அனைத்து ரயில்களும் நின்று செல்ல கோரி மனு
நான்குநேரியில் அனைத்து ரயில்களும் நின்று செல்ல கோரி மனு
நான்குநேரியில் அனைத்து ரயில்களும் நின்று செல்ல கோரி மனு
நான்குநேரியில் அனைத்து ரயில்களும் நின்று செல்ல கோரி மனு
ADDED : ஜூலை 28, 2011 01:46 AM
நான்குநேரி : நான்குநேரி ரயில்வே ஸ்டேஷனில் அனைத்து எக்ஸ்பிரஸ் ரயில்களும் நின்று செல்ல நடவடிக்கை எடுக்குமாறு மத்திய ரயில்வே அமைச்சரிடம் நான்குநேரி முன்னாள் எம்.எல்.ஏ.
வசந்தகுமார் நேரில் கோரிக்கை மனு கொடுத்துள்ளார்.இது சம்பந்தமாக அவர் கொடுத்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:-'நான்குநேரி மற்றும் சுற்றுபகுதி கிராம மக்கள் பலர் சென்னை, கோவை பகுதிகளில் தொழில் செய்து வருகின்றனர். மேலும் நான்குநேரியில் புகழ்மிக்க வானமாமலை பெருமாள் கோயில் உள்ளது. இக்கோயிலுக்கு வெளிமாநிலத்திலிருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர். நெல்லை-நாகர்கோவில் வழி தடத்தில் பஸ் ஸ்டாண்ட் அருகேயுள்ள ரயில்வே ஸ்டேஷன் நான்குநேரிதான்.
நான்குநேரி ரயில்வே ஸ்டேஷனில் பல எக்ஸ்பிரஸ் ரயில்கள் நிற்பதில்லை. இதனால் பொதுமக்கள், ரயில் பயணிகள் மிகவும் அவதிப்படுகின்றனர். குறிப்பாக கன்னியாகுமரியிலிருந்து சென்னை செல்லும் குமரி எக்ஸ்பிரஸ் ரயில், நாகர்கோவிலிருந்து கோவை செல்லும் எக்ஸ்பிரஸ் ரயில், நாகர்கோவிலிருந்து திருப்பதி வழியாக முன்பை செல்லும் எக்ஸ்பிரஸ் ஆகிய ரயில்கள் நான்குநேரி ரயில்வே ஸ்டேஷனில் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும்' என மனுவில் கூறியுள்ளார்.


