ADDED : ஆக 09, 2011 02:54 AM
புதுச்சேரி : வில்லியனூர் மூத்த குடிமக்கள் நலவாழ்வு சங்க செயற்குழு கூட்டம் சங்கர் வித்யாலயாவில் நடந்தது.
சங்கத் தலைவர் செல்வராசு தலைமை தாங்கினார்.
செயலாளர் ராசு ராதாகிருஷ்ணன் முன்னிலை வகித்தார்.கூட்டத்தில், வில்லியனூர் மற்றும் சுற்றியுள்ள கிராமப்புற முதியோர் நலனுக்காக பாண்கேர் கிளை அலுவலகம் திறக்க வேண்டும், மூளைச்சாவு ஏற்பட்டு உறுப்பு தானம் வழங்கிய வில்லியனூரைச் சேர்ந்த மாணவி சிந்தாமணி குடும்பத்திற்கு அரசு நிதியுதவி அளிக்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. துணைத் தலைவர் குபேரகிருஷ்ணன் நன்றி கூறினார்.


