/உள்ளூர் செய்திகள்/திருநெல்வேலி/குற்றாலம் அருகே பெண்ணிடம் செயின் பறிப்புகுற்றாலம் அருகே பெண்ணிடம் செயின் பறிப்பு
குற்றாலம் அருகே பெண்ணிடம் செயின் பறிப்பு
குற்றாலம் அருகே பெண்ணிடம் செயின் பறிப்பு
குற்றாலம் அருகே பெண்ணிடம் செயின் பறிப்பு
ADDED : ஆக 13, 2011 01:26 AM
குற்றாலம் : குற்றாலம் அருகே பெண்ணிடம் நகை பறித்த வாலிபரை போலீசார் தேடி
வருகின்றனர்.
மேலகரம் ஸ்டேட் பாங்க் காலனியில் வசித்து வருபவர்
பாலகிருஷ்ணன். இவர் பட்டுப்பூச்சி வளர்ப்பு அலுவலராக பணியாற்றி வருகிறார்.
இவரது மனைவி கஸ்தூரி (47). இவரும், அருகே வசிக்கும் 3 பெண்களும் சேர்ந்து
அருகேயுள்ள இலஞ்சி குமரன் கோயிலுக்கு சென்று சுவாமி கும்பிட்டு
மேலகரத்திற்கு நடந்து வந்து கொண்டிருந்தனர். சீவலப்பேரிகுளம் அருகே
வந்தபோது சுமார் 30 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர் கஸ்தூரி அணிந்திருந்த 3
பவுன் செயினை பறித்துக் கொண்டு ஓடிவிட்டார். இதன் மதிப்பு ரூ.60 ஆயிரம்
ரூபாய் ஆகும். கஸ்தூரி கொடுத்த புகாரின் அடிப்படையில் குற்றாலம்
இன்ஸ்பெக்டர் பூமிநாதன் வழக்குபதிவு செய்து மர்ம நபரை தேடி வருகிறார்.


