/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/தொழில் நுட்ப வல்லுநர்கள் கூட்டமைப்பு துவக்க விழாதொழில் நுட்ப வல்லுநர்கள் கூட்டமைப்பு துவக்க விழா
தொழில் நுட்ப வல்லுநர்கள் கூட்டமைப்பு துவக்க விழா
தொழில் நுட்ப வல்லுநர்கள் கூட்டமைப்பு துவக்க விழா
தொழில் நுட்ப வல்லுநர்கள் கூட்டமைப்பு துவக்க விழா
ADDED : ஆக 22, 2011 12:17 AM
திண்டிவனம் : திண்டிவனம் அரசு பொறியியல் கல்லூரியில் தொழில் நுட்ப
வல்லுநர்கள் கூட்டமைப்பு துவக்க விழா நடந்தது.
இக் கல்லூரியில்
கம்ப்யூட்டர் சயின்ஸ் இன்ஜினியரிங் துறை சார்பில் நடந்த விழாவிற்கு
கல்லூரி முதல்வர் அன்புக்குமரன் தலைமை தாங்கினார். துறைத் தலைவர் கெஜதா
டெபோரா முன்னிலை வகித்தார். உதவி பேராசிரியர் விஜயகுமார் வரவேற்றார்.
அண்ணா பல்கலைக்கழக கம்ப்யூட்டர் சயின்ஸ் மற்றும் இன்ஜினியரிங் துறை உதவி
பேராசிரியர் டாக்டர் பாஸ்கரன், சென்னை சீமென்ஸ் தனியார் நிறுவன புராஜக்ட்
லீடர் தமிழ்ச்செல்வன் ஆகியோர் சிறப்புரை நிகழ்த்தினர். கூட்டமைப்பின்
தலைவராக உதவி பேராசிரியர் விஜயகுமார், செயலராக இறுதியாண்டு மாணவர் தியாகு,
இணை செயலராக தனலட்சுமி, பொருளாளராக ஹரிபாபு, துணை பொரு ளாளராக ஷில்பா
அஸ்லம் தேர்வு செய்யப்பட்டனர்.


