ADDED : ஆக 26, 2011 07:21 PM
புதுடில்லி : ஜன் லோக்பால் மசோதா குறித்து ஓட்டெடுப்பு நடத்தப்படுவதன் மூலமே, அரசியல் கட்சிகளின் உண்மையான நிலை தெரிய வரும் என்றும்,விவாதத்தின் மூலம் இது சாத்தியமில்லை என்பதாலேயே, பா.ஜ., கட்சி ஓட்டெடுப்பை வலியுறுத்துவதாக கட்சி மூத்த தலைவர் அருண் ஜெட்லி தெரிவித்துள்ளார்.
பார்லிமென்டில், இம்மசோதா குறித்து விவாதம் மட்டுமே நடைபெறும், ஓட்டெடுப்பு நடத்தப்படாது என்று அரசு திட்டவட்டமாக அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.


