/உள்ளூர் செய்திகள்/கரூர்/அரசு மருத்துவமனை கோவிலில் கோழி தலைகளால் "திகில்' : கண்டுகொள்ளாத மருத்துவ அதிகாரிகள்அரசு மருத்துவமனை கோவிலில் கோழி தலைகளால் "திகில்' : கண்டுகொள்ளாத மருத்துவ அதிகாரிகள்
அரசு மருத்துவமனை கோவிலில் கோழி தலைகளால் "திகில்' : கண்டுகொள்ளாத மருத்துவ அதிகாரிகள்
அரசு மருத்துவமனை கோவிலில் கோழி தலைகளால் "திகில்' : கண்டுகொள்ளாத மருத்துவ அதிகாரிகள்
அரசு மருத்துவமனை கோவிலில் கோழி தலைகளால் "திகில்' : கண்டுகொள்ளாத மருத்துவ அதிகாரிகள்
கரூர்: அரசு மருத்துவமனை வளாகத்தில் உள்ள கருப்பண்ண ஸ்வாமிக்கு நேர்த்தி கடன் செலு த்த கோழி பலியிடப்படுகிறது.
நோயாளிகளின் வேண்டுதல் நிறைவேறினால், அவர்கள் நேர்த்தி கடனை மருத்துவமனை வளாகத்தில் உள்ள கோவிலில், கோழிகளை பலியிட்டு, பொங்கல் வைத்து எடுத்து சென்கின்றனர். நேர்த்திக்கடனை செலுத்தும் பொது மக்கள் கோவிலில் உள்ள இரும்பு வேல் முனையில்கோழி யின் தலைமை மட்டும் குத்தி விட்டு, அப்படியே விட்டு செல்கின்றனர். இப்படி பல மாதங்களாக நேர்த்திக்கடன் செலுத்தியவர்கள் கோழித் தலைகளை விட்டு செல்வதால், ரத்தம் தொய்ந்த நிலையில் காய்ந்து போய் வேல் முனையில் தொங்கி கொண்டுள்ள கோழித்தலைகள், மருத்துவமனைக்கு வரும் குழந்தைகள் மற்றும் பெண்கள் என பார்ப்பவர்களை திகிலடைய செய்கிறது. அரசு மருத்துவமனை வளாகத்தில் இப்படி கோழி, சேவல்களை பலியிட்டு நேர்த்தி கடன் செலுத்துவதை மருத்துவமனை நிர்வாகம் கண்டுகொள்ளாமல் உள்ளது.


