/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/பார்த்தீனியம் செடிகள் அழிப்பு கள்ளக்குறிச்சியில் சிறப்பு முகாம்பார்த்தீனியம் செடிகள் அழிப்பு கள்ளக்குறிச்சியில் சிறப்பு முகாம்
பார்த்தீனியம் செடிகள் அழிப்பு கள்ளக்குறிச்சியில் சிறப்பு முகாம்
பார்த்தீனியம் செடிகள் அழிப்பு கள்ளக்குறிச்சியில் சிறப்பு முகாம்
பார்த்தீனியம் செடிகள் அழிப்பு கள்ளக்குறிச்சியில் சிறப்பு முகாம்
ADDED : செப் 04, 2011 11:28 PM
கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சியில் பார்த்தீனியம் நச்சு செடியை அழிக்கும் முகாமினை எம்.எல்.ஏ., துவக்கி வைத்தார்.
நிகழ்ச்சிக்கு வேளாண் உதவி இயக்குனர்(பொறுப்பு) சங்கர் தலைமை தாங்கினார். கள்ளக்குறிச்சி எம்.எல்.ஏ., அழகுவேல்பாபு கலந்து கொண்டு முகாமினை துவக்கி வைத்தார். முகாமில் பார்த்தீனியம் நச்சு செடிகளை மண்ணெண்ணைய் ஊற்றி அழிப்பது, உப்பு கலந்த நீர் மூலம் அழிப்பது போன்ற முறைகள் குறித்து விளக்கப்பட்டது. வேளாண் அலுவலர் பொன்னுராசன், உதவி வேளாண் அலுவலர்கள் முருகேசன், ராஜா, கணேசன், ரமேஷ், ஜெயக்குமார், கவுன்சிலர் முருகன், ஒன்றிய ஜெ., பேரவை செயலாளர் சாமிதுரை, அறிவழகன்,
விவசாயிகள் சக்திவேல், தங்கவேல், தனசேகர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.


