இதற்கு மாற்றாக ரூ.பல கோடி செலவில் கட்டப்பட்ட புதுபஸ் ஸ்டாண்ட், 20 ஆண்டுகளாக செயல்படாமல் சுய நலவாதிகளால் முடங்கியது.'தினமலர்' செய்தி எதிரொலியாக கலெக்டர் பாலாஜி அதிரடி நடவடிக்கை மேற்கொண்டார். அதன்பயனாக புது பஸ் ஸ்டாண்ட் செயல்படுகிறது. விருதுநகர் வராது, பைபாஸ் ரோட்டில் சென்ற அனைத்து பஸ்களும் தற்போது புது பஸ்ஸ்டாண்ட் வந்து செல்கின்றன. இதனால் மகிழ்ச்சியுற்ற பொதுமக்களும், எந்த இடையூறு இல்லாமல் தொலை தூர பஸ்களுக்காக புதிய பஸ் ஸ்டாண்ட் வந்து செல்கின்றனர். விருதுபட்டியை விருதுநகராக்கும் திட்டத்திற்கு சுய நலவாதிகள் சிலர் இன்றும் முட்டுக்கட்டை போடுகின்றனர். மக்களால் தேர்வு செய்யப்பட்ட உறுப்பினர்களும் சுய நலவாதிகளின் பிடியில் சிக்கி, தங்களது தொலைநோக்கு சிந்தனையை மறந்து, குறுகிய மனப்பான்மையுடன் நடப்பது மக்களிடையே வெறுப்பை ஏற்படுத்தி உள்ளது. 95 சதவீத மக்கள் உணர்வுக்கு மதிப்பு அளிக்காமல் , சுயநலவாதிகளுக்காக பஸ் ஸ்டாண்ட் பிரச்னையை கையில் எடுத்துள்ள பாண்டியராஜன் எம்.எம்.ஏ.,விருதுநகரில் பதட்டமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளதாக அறிவித்து உள்ளார்.இது மக்களிடையே எரிச்சலை ஏற்படுத்தி உள்ளது. இது தொடர்பாக பலரின் ஆதங்கம்:வள்ளிக்குட்டி ராஜா(நகராட்சி கவுன்சிலர்): விருதுநகர் ஊர் பெயரை சொன்னாலே மதுரை மாட்டுத்தாவணி, திருநெல்வேலியில் பஸ்களில் மக்களை ஏற்றாத நிலை இருந்தது. புதிய பஸ் ஸ்டாண்ட் துவக்கியதிலிருந்து, பைபாஸ் ரைடர், நெடுஞ்சாலை எக்ஸ்பிரஸ், பாய்ண்ட் டூபாய்ண்ட் பஸ்கள் கூட நகருக்குள் வந்து செல்கின்றன. பழைய பஸ் ஸ்டாண்டால் நெருக்கடி ஏற்பட்டு பலரும் விபத்துக்குள்ளாகின்றனர். புது பஸ்ஸ்டாண்ட் செயல்பாடால் தற்போது ரோடுகளில் நெரிசல் குறைந்துள்ளது. மக்களுக்கும் புது பஸ்ஸ்டாண்ட் சென்றால், வெளியூர்களுக்கு எளிதில் செல்லலாம் என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளது. ஆனால் பழைய பஸ் ஸ்டாண்டில் நெருக்கடி இன்னும் குறையவில்லை. இதை தவிர்க்க இங்கிருந்து புறப்படும் அனைத்து பஸ்களையும் புதிய பஸ் ஸ்டாண்டுக்கு மாற்றம் செய்ய வேண்டும். 95 சதவீத மக்களின் நலனை எம்.எல்.ஏ., சிந்திக்க வேண்டும்.
இதற்கு மாற்றாக ரூ.பல கோடி செலவில் கட்டப்பட்ட புதுபஸ் ஸ்டாண்ட், 20 ஆண்டுகளாக செயல்படாமல் சுய நலவாதிகளால் முடங்கியது.'தினமலர்' செய்தி எதிரொலியாக கலெக்டர் பாலாஜி அதிரடி நடவடிக்கை மேற்கொண்டார். அதன்பயனாக புது பஸ் ஸ்டாண்ட் செயல்படுகிறது. விருதுநகர் வராது, பைபாஸ் ரோட்டில் சென்ற அனைத்து பஸ்களும் தற்போது புது பஸ்ஸ்டாண்ட் வந்து செல்கின்றன. இதனால் மகிழ்ச்சியுற்ற பொதுமக்களும், எந்த இடையூறு இல்லாமல் தொலை தூர பஸ்களுக்காக புதிய பஸ் ஸ்டாண்ட் வந்து செல்கின்றனர். விருதுபட்டியை விருதுநகராக்கும் திட்டத்திற்கு சுய நலவாதிகள் சிலர் இன்றும் முட்டுக்கட்டை போடுகின்றனர். மக்களால் தேர்வு செய்யப்பட்ட உறுப்பினர்களும் சுய நலவாதிகளின் பிடியில் சிக்கி, தங்களது தொலைநோக்கு சிந்தனையை மறந்து, குறுகிய மனப்பான்மையுடன் நடப்பது மக்களிடையே வெறுப்பை ஏற்படுத்தி உள்ளது. 95 சதவீத மக்கள் உணர்வுக்கு மதிப்பு அளிக்காமல் , சுயநலவாதிகளுக்காக பஸ் ஸ்டாண்ட் பிரச்னையை கையில் எடுத்துள்ள பாண்டியராஜன் எம்.எம்.ஏ.,விருதுநகரில் பதட்டமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளதாக அறிவித்து உள்ளார்.இது மக்களிடையே எரிச்சலை ஏற்படுத்தி உள்ளது. இது தொடர்பாக பலரின் ஆதங்கம்:வள்ளிக்குட்டி ராஜா(நகராட்சி கவுன்சிலர்): விருதுநகர் ஊர் பெயரை சொன்னாலே மதுரை மாட்டுத்தாவணி, திருநெல்வேலியில் பஸ்களில் மக்களை ஏற்றாத நிலை இருந்தது. புதிய பஸ் ஸ்டாண்ட் துவக்கியதிலிருந்து, பைபாஸ் ரைடர், நெடுஞ்சாலை எக்ஸ்பிரஸ், பாய்ண்ட் டூபாய்ண்ட் பஸ்கள் கூட நகருக்குள் வந்து செல்கின்றன. பழைய பஸ் ஸ்டாண்டால் நெருக்கடி ஏற்பட்டு பலரும் விபத்துக்குள்ளாகின்றனர். புது பஸ்ஸ்டாண்ட் செயல்பாடால் தற்போது ரோடுகளில் நெரிசல் குறைந்துள்ளது. மக்களுக்கும் புது பஸ்ஸ்டாண்ட் சென்றால், வெளியூர்களுக்கு எளிதில் செல்லலாம் என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளது. ஆனால் பழைய பஸ் ஸ்டாண்டில் நெருக்கடி இன்னும் குறையவில்லை. இதை தவிர்க்க இங்கிருந்து புறப்படும் அனைத்து பஸ்களையும் புதிய பஸ் ஸ்டாண்டுக்கு மாற்றம் செய்ய வேண்டும். 95 சதவீத மக்களின் நலனை எம்.எல்.ஏ., சிந்திக்க வேண்டும்.