/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/சட்ட விழிப்புணர்வு மன்றம் துவக்கம்சட்ட விழிப்புணர்வு மன்றம் துவக்கம்
சட்ட விழிப்புணர்வு மன்றம் துவக்கம்
சட்ட விழிப்புணர்வு மன்றம் துவக்கம்
சட்ட விழிப்புணர்வு மன்றம் துவக்கம்
ADDED : செப் 08, 2011 10:30 PM
வால்பாறை : ''வாழ்க்கையில் முன்னேற துடிக்கும் மாணவர்கள் ஒரு போதும் தவறு
செய்யக்கூடாது,'' என்று சட்ட விழிப்புணர்வு முகாமில் மாஜிஸ்திரேட்
வேலுச்சாமி பேசினார்.
வால்பாறை பியூலா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில்
வால்பாறை வட்ட சட்டப்பணிகள் குழு சார்பில் சட்ட விழிப்புணர்வு மன்ற
துவக்கவிழாவை துவக்கி வைத்து மாஜிஸ்திரேட் வேலுச்சாமி பேசியதாவது, சட்டம்
குறித்து மாணவர்கள் நன்றாக தெரிந்திருக்கவேண்டும். கிராம மக்களிடையே சட்டம்
குறித்து மாணவர்கள் விரிவாக எடுத்துரைக்க வேண்டும். எந்த உதவியானாலும்
இலவச சட்ட உதவி முகாமை மாணவர்கள் எப்போது வேண்டுமானலும் நாடலாம். பல்வேறு
பள்ளிகளில் துவங்கப்பட்டுள்ள மன்றங்களில் சிறப்பாக செயல்படும் சட்ட
விழிப்புணர்வு மன்றத்திற்கு ரூ.2 ஆயிரம் ரொக்கப்பரிசாக வழங்கப்படும்.
மாணவர்கள் ஒரு போதும் தவறு செய்யக்கூடாது. வாழ்க்கையில் உயர்ந்த இடத்திற்கு
செல்லத்துடிக்கும் மாணவர்கள் தவறு செய்யமாட்டார்கள். யார் தவறு செய்தாலும்
சட்டம் கடுமையாக தண்டிக்கும். இதை உணர்ந்து மாணவர்கள் நன்றாக படித்து
வாழ்க்கையில் வளம் பெறவேண்டும் என்றார். முன்னதாக பள்ளி முதல்வர்
மேதின்ஹென்றி வரவேற்றார். அரசு வக்கீல் பாலசுப்பிரமணியம், தோட்ட
நிறுவனங்களின் ஆய்வாளர் பழனிச்சாமி உட்பட பலர் கலந்து கொண்டனர்., வட்ட
சட்டப்பணிகள் குழு முதுநிலை நிர்வாக உதவியாளர் வெள்ளைசாமி நன்றி கூறினார்.


