ADDED : செப் 08, 2011 11:44 PM
சிதம்பரம் : சிதம்பரம் பைபாஸ் சாலையில் அரசு விரைவு பஸ் கவிழ்ந்து பத்துக்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
வேளாங்கண்ணியில் இருந்து சென்னை வரை செல்லும் அரசு விரைவு பஸ் நேற்று முன்தினம் நள்ளிரவு சிதம்பரம் வழியாக சென்றுகொண்டிருந்தது. மோகன் என்பவர் பஸ்சை ஓட்டி வந்தார். அதில் 32 பயணிகள் பயணம் செய்தனர். சிதம்பரம் பைபாஸ் சாலையில் பஸ் சென்று கொண்டிருந்தபோது பொய்யபிள்ளை சாவடி அருகே திடீரென பஸ் நிலை தடுமாறி சாலையை விட்டு இறங்கி தலைகீழாக கவிழ்ந்தது. திடீரென கேட்ட சத்தத்தால் தூக்கத்தில் இருந்த பயணிகள் என்ன நடக்கிறது என்பது தெரியாமல் கூச்சல் போட்டனர். அப்போது அருகில் சாலையோர பணியில் இருந்தவர்கள் பஸ்சின் இருபக்க கண்ணாடியை உடைத்து பயணிகளை மீட்டனர்.
இந்த விபத்தில் அதிர்ஷ்டவசமாக உயிர் இழப்பு ஏதும் இல்லை. விபத்தில் 10க்கும் மேற்பட்ட பயணிகள் லேசான காயமடைந்தனர்.


