Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/கண் தானம் குறித்த விழிப்புணர்வு முகாம்

கண் தானம் குறித்த விழிப்புணர்வு முகாம்

கண் தானம் குறித்த விழிப்புணர்வு முகாம்

கண் தானம் குறித்த விழிப்புணர்வு முகாம்

ADDED : செப் 16, 2011 12:44 AM


Google News
திண்டிவனம்:திண்டிவனம் அருகே உள்ள சரசுவதி பொறியியல் கல்லூரியில் கண் தானம் குறித்த விழிப்புணர்வு முகாம் நடந்தது.திண்டிவனம் அடுத்த கோனேரிக்குப்பம் சரசுவதி பொறியியல் கல்லூரியில் கண்தானம் பற்றிய விழிப்புணர்வு முகாம் நடந்தது.

வன்னியர் கல்வி அறக்கட்டளை இயக்குனர் அரிநாராயணன் தலைமை தாங்கினார். கல்லூரி முதல்வர் மாதவசர்மா வரவேற்றார். கல்லூரி டீன் முன்னாள் எம்.பி., தன்ராஜ் முகாமை துவக்கி வைத்தார்.புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனை உதவி பேராசிரியர் டாக்டர் ரமேஷ்பாபு சிறப்புரையாற்றினார். முதன்மை கண் பரிசோதகர் நடராஜன், கண்தானம் பற்றிய விழிப்புணர்வு ஒளிப்படம் மூலம் விளக்களித்தார்.இதில் கல்லூரி மாணவ, மாணவிகள் கலந்து கொண் டனர். பேராசிரியர் மாமல்லன் நன்றி கூறினார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us