/உள்ளூர் செய்திகள்/மதுரை/பதட்டமான பூத்கள் எவைபோலீசார் புது "டெக்னிக்'பதட்டமான பூத்கள் எவைபோலீசார் புது "டெக்னிக்'
பதட்டமான பூத்கள் எவைபோலீசார் புது "டெக்னிக்'
பதட்டமான பூத்கள் எவைபோலீசார் புது "டெக்னிக்'
பதட்டமான பூத்கள் எவைபோலீசார் புது "டெக்னிக்'
ADDED : செப் 25, 2011 03:28 AM
மதுரை:உள்ளாட்சி தேர்தலையொட்டி, மதுரையில் வேட்பாளர்களை பொறுத்து பதட்டமான பூத்களை நிர்ணயம் செய்ய போலீசார் முடிவு
செய்துள்ளனர்.சமீபத்தில் நடந்த சட்டசபை தேர்தலின்போது, மதுரையில் உள்ள
அனைத்து பூத்களும் பதட்டமானவையாக கண்டறியப்பட்டன. இதையே உள்ளாட்சி
தேர்தலிலும் பின்பற்றப்படும் என கருதப்பட்டது. இந்நிலையில், இம்முறை
கட்சிகள் சார்பில் வேட்பாளர்கள் தனித்தனியாக போட்டியிடுவதால், வார்டுகளில்
மோதலுக்கு பஞ்சமிருக்காது என போலீசார் கருதுகின்றனர். சில வேட்பாளர்கள்
வார்டு மாறி போட்டியிடுகின்றனர். இதனால் அந்த வார்டுகளிலும் பிரச்னை ஏற்பட
வாய்ப்பு உண்டு.
இதை கருத்திற்கொண்டு, வேட்பாளர்கள் மற்றும் அவர்களின் பின்னணியை பொறுத்து
பதட்டமான பூத்களை நிர்ணயிக்க போலீசார் முடிவு செய்துள்ளனர்.


