பெண்கள் வார்டில் ஆண் வேட்பாளர் மனு
பெண்கள் வார்டில் ஆண் வேட்பாளர் மனு
பெண்கள் வார்டில் ஆண் வேட்பாளர் மனு
ADDED : செப் 27, 2011 09:35 PM
ஆண்டிபட்டி : மாவட்ட கவுன்சிலர் பதவிக்கு ஆதி திராவிடர் பெண்களுக்கு ஒதுக்கப்பட்ட வார்டில் விபரம் தெரியாமல் ஆண் ஒருவர் வேட்பு மனுதாக்கல் செய்துள்ளார்.
ஆண்டிபட்டி ஊராட்சி ஒன்றியத்தில் மாவட்ட கவுன்சில் 6வது வார்டு ஆதிதிராவிடர் பெண்களுக்கானது. இந்த வார்டில் அம்மச்சியாபுரத்தை சேர்ந்த ஜெகந்நாதன் வேட்பு மனு தாக்கல் செய்தார். அதே ஊரைச்சேர்ந்த முத்துக்குமார் முன்மொழிந்துள்ளார். இந்த வார்டு ஆதிதிராவிடர் பெண்களுக்கு ஒதுக்கப்பட்டது என்று உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் கருணாநிதி தெரிவித்தும் அதனை பொருட்படுத்தாமல் மனு தாக்கல் செய்தார்.


