/உள்ளூர் செய்திகள்/திருநெல்வேலி/சீரான குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் வடகரை டவுன் பஞ்.,வேட்பாளர்கள் வாக்குறுதிசீரான குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் வடகரை டவுன் பஞ்.,வேட்பாளர்கள் வாக்குறுதி
சீரான குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் வடகரை டவுன் பஞ்.,வேட்பாளர்கள் வாக்குறுதி
சீரான குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் வடகரை டவுன் பஞ்.,வேட்பாளர்கள் வாக்குறுதி
சீரான குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் வடகரை டவுன் பஞ்.,வேட்பாளர்கள் வாக்குறுதி
கடையநல்லூர் : 'வடகரை டவுன் பஞ்.,சில் உள்ள அனைத்து பகுதிகளுக்கும் சீரான குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்' என வடகரை டவுன் பஞ்.,தலைவர் பதவிக்கு போட்டியிடும் அதிமுக.,- திமுக.,-காங்.,வேட்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்த தேர்தலில் வடகரை டவுன் பஞ்.,சில் கடுமையான போட்டி நிலவி வரும் நிலையில் வேட்பாளர்கள் அறிவித்துள்ள வாக்குறுதிகள் வருமாறு:- திமுக வேட்பாளர் அலியார் கூறியதாவது: வடகரை டவுன் பஞ்.,பகுதியில் சுகாதார திட்டத்திற்கு முழுமையான நடவடிக்கை எடுக்கப்படும். வீட்டில் சேரும் குப்பைகளை சேகரிக்கும் வகையில் வீடுதோறும் பிளாஸ்டிக் கூடைகள் வழங்குவதற்கு ஏற்பாடு செய்யப்படும். நகராட்சியில் சுகாதாரத்தை பராமரிக்க குப்பைகள் உடனே அகற்றப்படும் நிலையில் கூடுதலாக டிராக்டர்கள் நகராட்சி நிர்வாகம் சார்பில் வாங்கிட ஏற்பாடு செய்யப்படும்.
இந்த டவுன் பஞ்.,சை பொறுத்தவரை ஊழலற்ற தூய்மையான நிர்வாகம் மேற்கொள்வதற்கான அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும். சரவணபொய்கை புனரமைப்பு பணி மேற்கொள்ளப்படும். டவுன் பஞ்.,சில் உள்ள அனைத்து பகுதிகளுக்கும் சீரான முறையில் குடிநீர் கிடைத்திட திட்டம் வகுக்கப்படுவதுடன் புதிய குடிநீர் இணைப்புகள் வழங்கிட நடவடிக்கை எடுக்கப்படும்.
விவசாயிகளின் நலனை கருத்தில் கொண்டு கல்குளம், மூன்றுசுளி ரோடு, புரவன்பாறை ரோடு, கத்தரி மேடுகுளத்துக்கரை ஆகிய பகுதிகளில் சாலைகள் புதுப்பிக்கப்படும். பொதுமக்களிடம் இருந்து பெறப்படும் மனுக்களுக்கு 3 நாட்களில் பரிசீலனை செய்யப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும். விவசாயிகளுக்கும், ஓய்வூதியர்களுக்கும் உதவித் தொகை கிடைத்திட டவுன் பஞ்., சார்பில் ஏற்பாடு செய்யப்படும். அண்ணாநகர், உதயசெல்வன் காலனி, மேலகாலனி ஆகிய பகுதிகளில் சமூகநலக்கூடம் அமைக்கப்படும். தமிழகத்தில் அதிமுக ஆட்சி பொறுப்பில் இருப்பதால் முதல்வர் ஜெயலலிதா உத்தரவுப்படி, அமைச்சர் செந்தூர்பாண்டியன் பரிந்துரையின்படி, வடகரை டவுன் பஞ்., மக்களின் நலப்பணிகள், நலத்திட்ட பணிகள் தொய்வின்றி உடனடியாக மேற்கொள்ள ஏற்பாடு செய்யப்படும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
திமுக வேட்பாளர் எம்.எம்.ஏ.,முகம்மதுஷெரீப் கூறியதாவது:- வடகரை டவுன் பஞ்.,சினை பொறுத்தவரை திமுக தொடர்ந்து பலமுறை கைப்பற்றியுள்ளது. இந்த முறையும் இப்பகுதி மக்கள் பணியாற்றுவதற்கு அதற்கான பணியினை தருவார்கள் என மிகுந்த நம்பிக்கையுடன் இருக்கிறேன். வடகரை டவுன் பஞ்.,தலைவராக தேர்வு செய்யப்பட்டால் இப்பகுதியில் உள்ள பொதுமக்கள் கட்டடம் கட்டுவதற்கு அப்ரூவல் காலதாமதம் இன்றி கிடைத்திட ஏற்பாடு செய்யப்படும். 24 மணி நேரமும் வடகரை டவுன் பஞ்.,சில் உள்ள அனைத்து பகுதி மக்களுக்கும் சீரான குடிநீர் கிடைத்திடும். மேட்டு பகுதியில் உள்ள அனைவருக்கும் குடிநீர் சரிவர கிடைக்கவில்லை என்ற குறைபாடு களையப்படுவதற்கு அதிகாரிகளுடன் கலந்து பேசி உரிய ஏற்பாடு செய்யப்படும். சரவண பொய்கை சீரற்று கிடக்கும் நிலையில் அதனை புதுப்பிப்பதுடன் டவுன் பஞ்.,சிற்கு வருமானத்தை பெருக்கிட ஷாப்பிங் காம்ப்ளக்ஸ் கட்டுவதற்கு ஏற்பாடு செய்யப்படும்.
வடகரை அண்ணாநகர், ரகுமானியாபுரம், வாவாநகரம் உள்ளிட்ட பகுதிகளில் டவுன் பஞ்., சார்பில் திருமண மண்டபம் கட்டுவதற்கு ஏற்பாடு செய்யப்படும். இந்த டவுன் பஞ்.,சினை பொறுத்தவரை புதிய குடிநீர் இணைப்புகள் வேண்டி ஏராளமானோர் பதிவு செய்துள்ளனர். இதனை முறைப்படுத்தி குடிநீர் இணைப்பு கிடைத்திட உரிய நடவடிக்கை எடுக்கப்படும். வடகரையில் இருந்து முக்கிய நகரங்களுக்கு பஸ் வசதி செய்வதற்கு போக்குவரத்து துறை மூலம் ஏற்பாடு செய்யப்படும். சுகாதாரத்தை மேம்படுத்திட அனைத்து நடவடிக்கையும் எடுக்கப்படும். வடகரை டவுன் பஞ்.,சினை நகராட்சி அந்தஸ்து பெறுவதற்கான நடவடிக்கைககள் எடுக்கப்படும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
காங்.,வேட்பாளர் கே.எம்.உசேன் மைதீன் கூறியதாவது:- வடகரை டவுன் பஞ்.,சில் கடந்த 5 ஆண்டுகளில் எம்.எல்.ஏ.,வாக இருந்த பீட்டர் அல்போன்ஸ் தொகுதி நிதி ஒதுக்கீட்டின் மூலமாக பல்வேறு பணிகள் நடத்தப்பட்டுள்ளன. மேலும் தமிழக அரசின் சிறப்பு நிதிகளை வடகரை டவுன் பஞ்.,சிற்கு பெற்று தந்து பல்வேறு நலத்திட்ட பணிகளும், கட்டடங்களும் உருவாக்கப்பட்டுள்ளன.
வடகரை டவுன் பஞ்.,சில் காங்., கட்சியின் பெருமையை நிலை நிறுத்தும் வகையில் திராவிட கட்சிகளுக்கு இந்தமுறை வாய்ப்புகளை டவுன் பஞ்., பகுதி மக்கள் வழங்கமாட்டார்கள் என நிச்சயமாக எதிர்பார்க்கிறேன். இந்த பகுதியை பொறுத்தவரை சுகாதாரம், குடிநீர் வசதி உள்ளிட்டவை கடந்த சில மாதங்களாக சீரற்று கிடக்கிறது. இதனை சீரமைத்திட நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.


