/உள்ளூர் செய்திகள்/திருவள்ளூர்/அரசு பள்ளியில் சத்துணவு வழங்கப்படாததால் கோவில் அன்னதானத்தை நாடிச் செல்லும் மாணவர்கள்அரசு பள்ளியில் சத்துணவு வழங்கப்படாததால் கோவில் அன்னதானத்தை நாடிச் செல்லும் மாணவர்கள்
அரசு பள்ளியில் சத்துணவு வழங்கப்படாததால் கோவில் அன்னதானத்தை நாடிச் செல்லும் மாணவர்கள்
அரசு பள்ளியில் சத்துணவு வழங்கப்படாததால் கோவில் அன்னதானத்தை நாடிச் செல்லும் மாணவர்கள்
அரசு பள்ளியில் சத்துணவு வழங்கப்படாததால் கோவில் அன்னதானத்தை நாடிச் செல்லும் மாணவர்கள்
ADDED : அக் 03, 2011 10:51 PM
அரசு பள்ளிகளில் தேர்வு நடைபெறும் நேரத்தில் சத்துணவு வழங்காததால், மாணவர்கள், அருகிலுள்ள கோவில்களில் நடக்கும் அன்னதானத்தை நாடிச் சென்று, மதிய உணவு சாப்பிடுகின்றனர்.திருவள்ளூர் மாவட்டத்தில் துவக்க, நடுநிலை மற்றும் உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகள் என மொத்தம் 1,530 பள்ளிகள் உள்ளன.
இதேபோல் 2,085 அங்கன்வாடி மையங்களும் உள்ளன. இப்பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவியருக்கு பள்ளி நாட்களில், அரசு சத்துணவு வழங்கி வருகிறது. இதற்கென பள்ளிகள் தோறும் அமைப்பாளர்கள் மற்றும் உதவியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.இப்பள்ளிகளில், மாணவர்களுக்கு வழங்கப்படும் சத்துணவு தரமாக இருப்பதில்லை. குறிப்பாக, தேர்வு நேரங்களில் மாணவர்களுக்கு மதிய உணவு சத்துணவை, அமைப்பாளர்கள் வழங்குவதில்லை. இதனால் மாணவர்கள் பசியுடன் தேர்வு எழுதிவிட்டு, தங்கள் வீட்டிற்கு சென்று தான் உணவு அருந்துவார்கள். இந்நிலையில் சமீபத்தில் காலாண்டு தேர்வு நடந்தது.அப்போது ஆர்.கே.பேட் டை ஒன்றியம், பெரியநாகபூண்டி கிராமத்தில், துவக்க மற்றும் உயர்நிலைப் பள்ளிகளில் பயிலும், 405 மாணவர்களுக்கு மதியம் உணவு வழங்கவில்லை. பள்ளி மாணவர்கள் தங்கள் பசியை போக்குவதற்காக, அங்குள்ள கோவிலின் அன்னதான திட்டத்திற்கு சென்று, மதிய உணவு சாப்பிட்டுவிட்டு, தேர்வு எழுதிய பின் வீட்டிற்கு சென்றனர். இதுகுறித்து பள்ளி மாணவர்கள் கூறும்போது, 'இங்குள்ள நாகவள்ளி உடனுறை நாகேஸ்வர சுவாமி கோவில் அன்னதானத்தில் சாதம், சாம்பார், ரசம், மோர், இரண்டு பொரியல் மற்றும் அப்பளத்துடன் சாப்பாடு வழங்கப்படுகிறது. ஆனால், எங்களுக்கு பள்ளியில் வழங்கப்படும் சத்துணவு சரியில்லை. எனவே, நாங்கள் அன்னதான கூடத்திற்கு சென்று, வரிசையில் காத்திருந்து, மதிய உணவை சாப்பிடுகிறோம். காலாண்டு தேர்வு நடைபெற்ற போது சத்துணவு இல்லை என கூறிவிட்டனர்,' என்றனர்.இதுகுறித்து, கல்வித்துறை அதிகாரி ஒருவர் கூறும்போது, 'தேர்வு நேரங்களில் கண்டிப்பாக சத்துணவு அளிக்க வேண்டுமென, உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அப்படி தவறும்பட்சத்தில் சம்பந்தப்பட்ட ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்,' என்றார்.அரிசி, பருப்பு, கிழங்கு, சுண்டல் எங்கே: அரசு உயர்நிலைப் பள்ளி, நடுநிலைப் பள்ளி மற்றும் தொடக்கப் பள்ளி மாணவர்களுக்கு, பள்ளி வேலை நாட்களில் சத்துணவு சமைத்து வினியோகம் செய்வதற்காக அரிசி, பருப்பு மற்றும் காய்கறிகளை, ஒன்றிய நிர்வாகம் மாணவர்களுக்கு ஏற்றவாறு சரியான அளவு வழங்கி வருகிறது. வாரத்தில் ஒரு நாள் சுண்டல், உருளைக்கிழங்கும் வழங்க வேண்டும் என, ஆணை உள்ளது.மேலும் சமையல் செய்வதற்கு, விறகு வாங்குவதற்கு செலவு தொகையும் வழங்கப்படுகிறது. இப்படி மாணவர்களுக்கு வழங்கும் அரிசி, பருப்பு, ஆயில் போன்றவற்றை, சத்துணவு ஊழியர்கள் சுருட்டிக் கொண்டு, வெளி மார்க்கெட்டில் விற்பனை செய்கின்றனர். ஆனால் உருளைக்கிழங்கு மற்றும் சுண்டலை இதுவரை மாணவர்கள் பார்த்தது இல்லை என, கூறுகின்றனர்.சர்க்கரைப் பொங்கலும் போடல: மேலும் அண்ணா பிறந்த நாள், தீபாவளி, பொங்கல் உட்பட முக்கிய விசேஷ நாட்களில், மாணவர்களுக்கு சர்க்கரைப் பொங்கல் சிறப்பு உணவாக வழங்க வேண்டும். அதையும் பள்ளிகளில் வழங்குவதில்லை என்ற குற்றச்சாட்டுள்ளது. அமைப்பாளர்கள் சிலர் தங்கள் வீடுகளுக்கு, பொருட்களை எடுத்துச் செல்கின்றனர். எனவே, ரேஷன் அரிசி கடத்தலை தடுக்கும் அரசு, இதையும் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
எம்.டி.கணபதி


