Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/சென்னை/குவைத் விபத்து: இருவரின் உடல் உறவினரிடம் ஒப்படைப்பு

குவைத் விபத்து: இருவரின் உடல் உறவினரிடம் ஒப்படைப்பு

குவைத் விபத்து: இருவரின் உடல் உறவினரிடம் ஒப்படைப்பு

குவைத் விபத்து: இருவரின் உடல் உறவினரிடம் ஒப்படைப்பு

ADDED : அக் 07, 2011 12:55 AM


Google News

திரிசூலம் : குவைத் விபத்தில் இறந்து போன இருவரின் உடல்கள், நேற்று முன்தினம், விமானம் மூலம் சென்னை வந்து சேர்ந்தன.

கடந்த 1ம் தேதி, குவைத்தில் உள்ள ஒரு ஆயில் நிறுவனத்தில், சிலிண்டர் வெடித்து ஏற்பட்ட விபத்தில் சிக்கி, தமிழகத்தைச் சேர்ந்த நால்வர் இறந்தனர். அவர்களில், அரக்கோணத்தைச் சேர்ந்த ராஜாராம்,36, சென்னை, கிண்டியைச் சேர்ந்த ஜானகிராமன்,35, ஆகிய இருவரின் உடல், நேற்று முன்தினம், ஏர் இந்தியா விமானம் மூலம், சென்னைக்குக் கொண்டு வரப்பட்டது. விமான நிலையத்தில் காத்திருந்த உறவினர்கள், உடல்களைப் பெற்றுக் கொண்டனர்.









      Our Apps Available On




      Dinamalar

      Follow us