/உள்ளூர் செய்திகள்/கடலூர்/தேர்தல் விதிமுறைகள் பற்றி அனைத்துக் கட்சி கூட்டம்தேர்தல் விதிமுறைகள் பற்றி அனைத்துக் கட்சி கூட்டம்
தேர்தல் விதிமுறைகள் பற்றி அனைத்துக் கட்சி கூட்டம்
தேர்தல் விதிமுறைகள் பற்றி அனைத்துக் கட்சி கூட்டம்
தேர்தல் விதிமுறைகள் பற்றி அனைத்துக் கட்சி கூட்டம்
ADDED : அக் 07, 2011 01:21 AM
திட்டக்குடி : பெண்ணாடத்தில் நடந்த அனைத்துக்கட்சி தேர்தல் ஆலோசனைக்
கூட்டத்தில் தேர்தல் நன்னடத்தை விதிமுறைகளை பின்பற்றுமாறு
வலியுறுத்தப்பட்டது. உள்ளாட்சி தேர்தல் நடக்க உள்ளதை முன்னிட்டு பெண்ணாடம்
காவல்துறை சார்பில் தேர்தல் பிரசாரத்தின் போது கடைபிடிக்க வேண்டிய
நன்னடத்தை விதிமுறைகள் குறித்து அனைத்துக்கட்சி ஆலோசனைக் கூட்டம் நடந்தது.
இன்ஸ்பெக்டர் சுப்பராயலு தலைமை தாங்கினார். சப் இன்ஸ்பெக்டர்கள் மகேஸ்வரி,
கருணாநிதி, பன்னீர்செல்வம், பேரூராட்சி செயல்அலுவலர் ராம்குமார் முன்னிலை
வகித்தனர். அ.தி.மு.க., நகர செயலர் மதியழகன், ஒன்றிய செயலர் ராஜேந்திரன்,
தி.மு.க., வேட்பாளர் முருகேசன், காங்., நகர தலைவர் பொன்னுசாமி, முன்னாள்
எம்.எல்.ஏ., புரட்சிமணி, பா.ம.க., நகர செயலர் சின்னதுரை, தே.மு.தி.க., நகர
செயலர் மணி உட்பட பல்வேறு அரசியல் கட்சிகளைச் சேர்ந்தவர்கள் கூட்டத்தில்
பங்கேற்றனர். தேர்தல் பிரசாரத்திற்கு பயன்படுத்தப்படும் வாகனங்களுக்கு
அனுமதி பெற்று சான்றினை வாகனத்தில் ஒட்ட வேண்டும்.
தனி நபர் விமர்சனங்கள் கூடாது உள்ளிட்ட தேர்தல் விதிமுறைகளை கடைபிடிக்க வலியுறுத்தப்பட்டது.


