அரக்கோணம் ரயில் விபத்து: பலி உயர்வு
அரக்கோணம் ரயில் விபத்து: பலி உயர்வு
அரக்கோணம் ரயில் விபத்து: பலி உயர்வு
ADDED : அக் 08, 2011 10:44 AM
அரக்கோணம் : அரக்கோணம் ரயில் விபத்தில் உயிரழந்தவர்களின் எண்ணிக்கை 11 ஆக உயர்ந்துள்ளது.
விபத்தில் காயமடைந்து சிகிச்சை பெற்று வந்த கண்ணன் 25 நாட்களுக்கு பின் உயிரிழந்துள்ளார். பிரேத பரிசோதனைக்கு பிறகு அவரது உடலை வாங்க உறவினர்கள் முன் வரவில்லை. இந்நிலையில் விபத்து தொடர்பான விசாரணையில் டிரைவர் ராஜ்குமார், மொபைலில் பேசியபடியே ரயிலை இயக்கியதாலும், சிவப்பு சிக்னலை கனவித்தும் ரயிலை நிறுத்த முயற்சிக்காததுமே விபத்திற்கு காரணம் என தெரிய வந்துள்ளது. இது தொடர்பாக டிரைவர் ராஜ்குமார் மீது கொலை அல்லது உயிரிழப்பிற்கு காரணம் என்ற பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


