ADDED : அக் 08, 2011 07:13 PM

கோவை: நவக்கரை எஸ்.எஸ்.கே., பொறியியல் கல்லூரியில், சென்னை டெலி-லைப் டெக்., மற்றும் சி.எஸ்.ஐ., சேப்டர் நிறுவனங்கள் சார்பில் 'ஆன்ராய்டு' தொழில்நுட்பம் குறித்த ஒரு நாள் பயிலரங்கு நடந்தது.
பயிலரங்கை கல்லூரி முதல்வர் ரவிச்சந்திரன் துவக்கி வைத்தார். சிறப்பு விருந்தினர்களாக டெலி-லைப் டெக்., நிறுவனத்தின் முதன்மை செயல் அலுவலர் பார்த்தசாரதி, சி.எஸ்.ஐ., சேப்டரின் அதிகாரி இம்ரான் அக்தர் கலந்து கொண்டனர். இவர்கள் ஆன்ராய்டின் முகவுரை மற்றும் வரலாறு, ஆன்ராய்டின் செயல்பாடு மற்றும் பயன்பாடு ஆகிய தொழில்நுட்பங்கள் பற்றி விளக்கினர்.


