பார்வையாளர்கள் தொடர்பு எண்கள்வெளியிடுவதில் தொடரும் தாமதம்
பார்வையாளர்கள் தொடர்பு எண்கள்வெளியிடுவதில் தொடரும் தாமதம்
பார்வையாளர்கள் தொடர்பு எண்கள்வெளியிடுவதில் தொடரும் தாமதம்
ADDED : அக் 09, 2011 11:30 PM
தேர்தல் பார்வையாளர்களை தொடர்பு கொள்வதற்கான மொபைல்போன் எண்களை வெளியிடுவதில், கால தாமதம் ஏற்பட்டுள்ளது.உள்ளாட்சி தேர்தல் முறையாக நடக்கிறதா என்பதை ஆய்வு செய்வதற்காக,மாநிலம் முழுவதும் ஒவ்வொரு மாவட்டத்திற்கும், தேர்தல் பார்வையாளர்களாக ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்கள், தேர்தல் விதிமுறை மீறல்களை கண்காணித்து, மாநில தேர்தல் கமிஷனுக்கு தகவல் அளிக்க உள்ளனர். இவர்களை தொடர்பு கொண்டு வேட்பாளர்கள், வாக்காளர்கள் புகார் செய்யலாம். ஆனால், இவர்களை தொடர்பு கொள்வதற்கான மொபைல்போன் எண்களை, இதுவரை மாநில தேர்தல் கமிஷன் வெளியிடவில்லை.
இதனால் தேர்தல் அதிகாரிகளின் நடவடிக்கைகள் குறித்தும், வேட்பாளர்களின் தேர்தல் விதிமீறல்கள் குறித்தும் புகார் அளிக்க, யாரை தொடர்பு கொள்வது என்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.இதனால், முக்கிய கட்சிகளின் வேட்பாளர்கள் மட்டுமின்றி, சுயேச்சை வேட்பாளர்களும் குழப்பத்திற்கு ஆளாகியுள்ளனர். உடனடியாக தேர்தல் பார்வையாளர்களின் மொபைல் போன் எண்களை வெளியிட வேண்டும் என, வேட்பாளர்கள் எதிர்பார்க்கின்றனர்.நமது சிறப்பு நிருபர்


