/உள்ளூர் செய்திகள்/கடலூர்/அ.தி.மு.க., வேட்பாளரின் குற்றப் பின்னணி துண்டு பிரசுரத்தால் பண்ருட்டியில் பரபரப்புஅ.தி.மு.க., வேட்பாளரின் குற்றப் பின்னணி துண்டு பிரசுரத்தால் பண்ருட்டியில் பரபரப்பு
அ.தி.மு.க., வேட்பாளரின் குற்றப் பின்னணி துண்டு பிரசுரத்தால் பண்ருட்டியில் பரபரப்பு
அ.தி.மு.க., வேட்பாளரின் குற்றப் பின்னணி துண்டு பிரசுரத்தால் பண்ருட்டியில் பரபரப்பு
அ.தி.மு.க., வேட்பாளரின் குற்றப் பின்னணி துண்டு பிரசுரத்தால் பண்ருட்டியில் பரபரப்பு
ADDED : அக் 12, 2011 01:04 AM
கடலூர் : பண்ருட்டி நகர மன்ற தலைவர் பதவிக்கு போட்டியிடும் அ.தி.முக.,
வேட்பாளரின் குற்ற வழக்குகள் குறித்த விவரங்களை காங்., வேட்பாளர் துண்டு
பிரசுரமாக வீடு, வீடாக வழங்கி வருவதால் பரபரப்பு நிலவி வருகிறது.
கடலூர்
மாவட்டம் பண்ருட்டி நகர மன்ற தலைவர் பதவிக்கு 9 பேர் போட்டியிடுகின்றனர்.
இவர்களில் அ.தி.மு.க., பன்னீர்செல்வம், தி.மு.க., ஆனந்தி, காங்.,
பஞ்சவர்ணம், தே.மு.தி.க., அறிவொளி ஆகியோருக்கிடையே கடும் போட்டி நிலவி
வருகிறது. ஆளும் கட்சியான அ.தி.மு.க., பன்னீர்செல்வம், அமைச்சர் சம்பத்தின்
ஆதரவில் எப்படியும் இந்த முறை வெற்றி பெற்றே ஆக வேண்டும் என கங்கணம்
கட்டிக் கொண்டு பிரசார யுக்திகளை கையாண்டு வருகிறார். மேலும், தி.மு.க.,
வினரின் நேரடி ஆதரவினால் தேர்தல் களத்தில் அ.தி.மு.க., - காங்.,
வேட்பாளர்களுக்கு இடையே நேரடி போட்டி ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், கடந்த
மூன்று நாட்களாக பண்ருட்டி நகர பகுதிகளில் அ.தி.மு.க., வேட்பாளர்
பன்னீர்செல்வம் மீதுள்ள ஆள் கடத்தல், கட்டப் பஞ்சாயத்து, கொலை முயற்சி,
கொலை உள்ளிட்ட பல்வேறு வழக்கு நிலுவையில் உள்ள விவரங்களையும், இந்த
வழக்குகள் தொடர்பாக கடந்த 2009ம் ஆண்டு முன் ஜாமின் கோரிய
பன்னீர்செல்வத்திற்கு முன் ஜாமின் வழங்க எதிர்ப்பு தெரிவித்து கடந்த 2009ம்
ஆண்டு மார்ச் 24ம் தேதி பண்ருட்டி இன்ஸ்பெக்டர், கடலூர் செஷன்ஸ் கோர்ட்
அரசு வழக்கறிஞருக்கு அனுப்பிய கடித நகலையும் ஜெராக்ஸ் எடுத்து காங்.,
கட்சியினர் வீடு, வீடாக வினியோகித்து வருகின்றனர். காங்., கட்சியினரின்
இந்த அதிரடி துண்டு பிரசுரத்தினால் பண்ருட்டியில் பரபரப்பு நிலவி வருகிறது.


