Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/சேலம்/அ.தி.மு.க., போட்டி வேட்பாளர்களுக்கு கல்தா கட்சி தலைமையின் அதிரடியால் கலக்கம்

அ.தி.மு.க., போட்டி வேட்பாளர்களுக்கு கல்தா கட்சி தலைமையின் அதிரடியால் கலக்கம்

அ.தி.மு.க., போட்டி வேட்பாளர்களுக்கு கல்தா கட்சி தலைமையின் அதிரடியால் கலக்கம்

அ.தி.மு.க., போட்டி வேட்பாளர்களுக்கு கல்தா கட்சி தலைமையின் அதிரடியால் கலக்கம்

ADDED : அக் 12, 2011 02:20 AM


Google News
சேலம்:சேலம் மாநகராட்சியில், அ.தி.மு.க., வேட்பாளர்களுக்கு, எதிராக களம் இறங்கிய போட்டி வேட்பாளர்கள், அவர்களுக்கு ஆதரவாக செயல்பட்டவர்கள் ஆகியோர், அ.தி.மு.க., வில் இருந்து அதிரடியாக நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். கட்சி தலைமையின் நடவடிக்கையால், மாநகர அ.தி.மு.க., வினர் கலக்கம் அடைந்துள்ளனர்.

சேலம் மாநகராட்சியில், அ.தி.மு.க., சார்பில் போட்டியிட்டு கவுன்சிலர் பதவியை பெற வேண்டும் என்ற முக்கிய நிர்வாகிகள் உள்பட பலர் காய் நகர்த்தினர். அதிகப்பட்சமாக, அ.தி.மு.க., வில், 300 க்கும் மேற்பட்டோர் விருப்ப மனுக்களை வழங்கினர்.கட்சி தலைமை சார்பில், அறிவிக்கப்பட்ட வேட்பாளர்கள் பட்டியலில், இடம் பெறாதவர்கள் அதிருப்தி அடைந்தனர். அ.தி.மு.க., ஆதரவாளர்கள் சிலருடன் கை கோர்த்து கொண்டு, போட்டி வேட்பாளர்களாக களம் இறங்க முடிவு செய்தனர். பலர் விருப்ப மனுவை தாக்கல் செய்தனர்.அ.தி.மு.க., தலைமை அதிர்ச்சி அடைந்தது. சேலம் மாநகராட்சி, கொண்டலாம்பட்டி ஜெயலலிதா பேரவை துணை தலைவர் கறிக்கடை பழனிசாமி, கொண்டலாம்பட்டி எம்.ஜி.ஆர்., மன்ற தலைவர் குப்புசாமி, 58 வது வார்டு ஜெயலலிதா பேரவை செயலாளர் விஸ்வநாதன் ஆகியோர் கட்சியில் இருந்து நீக்கம் செய்யப்பட்டனர்.

கட்சி தலைமையின் நடவடிக்கைக்கு பிறகு, போட்டி வேட்பாளர்கள் பின் வாங்கி, அ.தி.மு.க., வினர் ஒருங்கிணைந்து செயல்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது. போட்டி வேட்பாளர்கள் தங்கள் முடிவை மாற்றி கொள்ளவில்லை. வேட்பு மனு வாபஸ் பெறுவதற்கு முன், அ.தி.மு.க., பொது செயலாளர் ஜெயலலிதா, அ.தி.மு.க., வினர் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டுகோள் விடுத்தார்.ஆனாலும், போட்டி வேட்பாளர்கள் தங்கள் முடிவில் உறுதியாக இருந்தனர். அ.தி.மு.க., தலைமை சார்பில் போட்டி வேட்பாளர்களின் விபரங்கள், அவர்களுக்கு ஆதரவாக செயல்படுபவர்கள் குறித்த பட்டியல் தயார் செய்யும் பணி நடந்தது. நேற்று முன்தினம், அவர்கள் அனைவரும் அதிரடியாக கட்சியில் இருந்து நீக்கம் செய்யப்பட்டனர்.சேலம் மாநகராட்சியில், பாலகிருஷ்ணன்(3 வது வட்டம்), ஆறுமுகம்(சூரமங்கலம் பகுதி வட்டபாக செயலாளர்), ஏழுமலை(3 வது வார்டு), மனோண்மணி(5 வது வட்டம்), அய்யந்துரை(முன்னாள் கவுன்சிலர்), ராஜேஸ்வரி(மாவட்ட மகளிர் அணி துணை செயலாளர்), விஸ்வநாதன்(முன்னாள் மாநகர், மாவட்ட துணை செயலாளர்), கிருஷ்ணமூர்த்தி(எட்டாவது வார்டு முன்னாள் பொருளாளர்), தனசேகரன்(25 வது வட்டம்), முனுசாமி(சூரமங்கலம் பகுதி வட்டபாக செயலாளர்), அய்யனார்(25 வது வட்டம்), மகேஸ்வரி(மாவட்ட மகளிர் அணி பொருளாளர்), சந்திரகாந்த்(அம்மாப்பேட்டை பகுதி முன்னாள் துணை செயலாளர்), சந்திரன்(54 வது வார்டு வட்டபாக செயலாளர்), பாண்டியின்(கவுன்சிலர்), சந்திரசேகரன்(58 வது வார்டு பொருளாளர்), ஆணைவரதன்((60 வது வார்டு முன்னாள் செயலாளர்) ஆகிய, 17 பேர், நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.இதில், பாலகிருஷ்ணன், மனோண்மணி, ராஜேஸ்வரி, தனசேகரன், மகேஸ்வரி, அய்யந்துரையின் மனைவி ஆகியோர் போட்டி வேட்பாளர்களாக களம் இறங்கியுள்ளனர். அ.தி.மு.க., வின் அதிரடி நடவடிக்கையால், போட்டி வேட்பாளர்களுக்கு ஆதரவாக செயல்பட்ட மாநகர அ.தி.மு.க., வினர் கலக்கம் அடைந்துள்ளனர். விரைவில் அடுத்த கல்தா பட்டியல் வெளியாக உள்ளது என்றும், கட்சி வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us