மூணாறு பெண் கொலை: கொலையாளி தற்கொலை
மூணாறு பெண் கொலை: கொலையாளி தற்கொலை
மூணாறு பெண் கொலை: கொலையாளி தற்கொலை
UPDATED : அக் 12, 2011 08:33 AM
ADDED : அக் 12, 2011 08:31 AM
மூணாறு மூணாறு லாட்ஜில், சென்னையைச் சேர்ந்த சியாமளா என்ற பெண் கொலை செய்யப்பட்ட வழக்கில், தேடுப்பட்டு வந்த முக்கிய குற்றவாளி மகேஷ்குமார் தற்கொலை செய்து கொண்டார்.
கோபி அருகே உள்ள பட்டிமணியக்காரன்பாளையத்தில் தற்கொலை செய்து கொண்டதாக போலீசார் தெரிவித்துள்ளனர். குடும்பத்தகராறு காரணமாக கொலையில் முடிந்ததாக கூறப்படுகிறது. முன்னதாக சியாமளாவை கொலை செய்த மகேஷ்குமாரை ஈரோடு, கோவை என பல மாவட்டங்களில், தேடி வந்த நிலையில் இவர் தற்கொலை செய்து கொண்டார். தொடர்ந்து போலீசார் விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர்.


