ADDED : ஆக 18, 2011 07:41 PM
வேலூர்: நில மோசடி வழக்கில் கைதாகி, வேலூர் சிறையில் உள்ள, தி.மு.க., முன்னாள் எம்.எல்.ஏ., ரங்கநாதனை சந்திக்க, முன்னாள் துணை முதல்வர் ஸ்டாலின் வேலூர் வந்தார்.
காலை 11.50 மணிக்கு ரங்கநாதனை சந்தித்துப் பேசி விட்டு, வெளியே வந்தவரை சந்தித்த நிருபர்கள், ''தூக்கு தண்டனை கைதிகள் முருகன், சாந்தன், பேரறிவாளன் கருணை மனு நிராகரிக்கப்பட்ட விஷயத்தில் அனைத்து கட்சிகளும் ஒன்றாக குரல் கொடுக்க வேண்டும்' என, வைகோ கூறியுள்ளாரே?'' என கேட்டனர். ''இது குறித்து தலைவர் கருணாநிதி பதில் கூறிவிட்டார். அதே நிலைப்பாடு தான்,'' என்றார். வைகோ குறித்து முதல் கேள்வி கேட்டதால் டென்ஷனான ஸ்டாலின் மற்ற கேள்விகளுக்கு பதில் அளிக்காமல் அவசரமாக காரில் ஏறி பறந்தார்.


