முத்தியால்பேட்டையில்இருவர் தற்கொலை
முத்தியால்பேட்டையில்இருவர் தற்கொலை
முத்தியால்பேட்டையில்இருவர் தற்கொலை
ADDED : அக் 13, 2011 02:05 AM
புதுச்சேரி:முத்தியால்பேட்டை பகுதியில் பெயின்டர் உள்ளிட்ட இருவர் தூக்கு
போட்டு தற்கொலை செய்து கொண்டனர்.வாழைக்குளம் முருகேச கிராமணி தோட்டத்தைச்
சேர்ந்தவர் ஆதிசேஷன், 49; பெயின்டர்.
குடி பழக்கம் உள்ள இவர் கடந்த சில
நாட்களாக சரிவர வேலைக்கு செல்லாததால், மது குடிக்க பணம் இல்லாமல்
இருந்தார். இதனால், விரக்தியடைந்த ஆதிசேஷன் நேற்று முன்தினம் தூக்கு
போட்டு தற்கொலை செய்து கொண்டார்.மற்றொரு சம்பவம் :சின்னையாபுரம் ராஜகோபால்
கிராமணி தோட்டத்தில் வசித்தவர் மணிகண்டன் (எ) சதீஷ், 32. இவர் மீது
பல்வேறு வழக்குகள் உள்ளன. இவர் நேற்று முன்தினம் தூக்கு போட்டு தற்கொலை
செய்து கொண்டார்.இவ்விரு சம்பவங்கள் குறித்து முத்தியால்பேட்டை போலீசார்
வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.


