ADDED : ஜூலை 26, 2011 09:33 PM
கோவை : கோவை சவுரிபாளையத்தில் உள்ள மகளிர் சேவா சங்கம் சார்பில், பொருளாதார நிலையில் பின்தங்கிய மாணவர்களுக்கு இலவச நோட்டுகள் வழங்கப்பட்டன.
மகளிர் சேவா சங்கத் தலைவர் ரீனா வரவேற்றார். லயன்ஸ் கிளப் நிர்வாகி ராஜேந்திரன் தலைமை வகித்தார். 10ம் வகுப்பு பொதுத்தேர்வில் காப்பகத்தில் அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவிகள் சாரதா, சவுமியாவுக்கு பரிசுகளும், பொருளாதார நிலையில் பின்தங்கிய 80 குழந்தைகளுக்கு இலவச நோட்டுகளும் வழங்கப்பட்டன.