Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/தேனி/பெரியகுளத்தை பசுமை நகராட்சியாக்குவேன்

பெரியகுளத்தை பசுமை நகராட்சியாக்குவேன்

பெரியகுளத்தை பசுமை நகராட்சியாக்குவேன்

பெரியகுளத்தை பசுமை நகராட்சியாக்குவேன்

ADDED : அக் 07, 2011 10:45 PM


Google News

பெரியகுளம் : பெரியகுளம் நகராட்சியை பசுமை நகராட்சியாக மாற்றுவதுடன், தென் மாவட்டங்களின் முதன்மை நகராட்சியாக மாற்றுவேன் என அ.தி.மு.க., வேட்பாளர் ஓ.ராஜா உறுதியளித்துள்ளார்.பெரியகுளம் நகராட்சியில் அ.தி.மு.க., வேட்பாளராக இரட்டைஇலை சின்னத்தில் போட்டியிடுபவர் ஓ.ராஜா, 54.

விவசாயம் இவரது முக்கிய தொழில். அமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தின் தம்பி. பெரியகுளம் நகராட்சி தலைவராக ஓ.பன்னீர்செல்வம் 1996-2001 வரை இருந்த போது, அனைத்து வசதிகளையும் பூர்த்தி செய்து சிறந்த நகராட்சி தலைவர் என பெயர் பெற்றார். அப்போது, ஓ.ராஜா, 24 வது வார்டு கவுன்சிலராக இருந்து வார்டின் அனைத்து வசதிகளையும் செய்து கொடுத்து, சிறந்த கவுன்சிலர் என பெயர் பெற்றார். கட்சி அறிவித்த அனைத்து பணிகளையும் முழுமையாக செய்து வருவதால், தமிழக முதல்வர் இவரை வேட்பாளராக அறிவித்துள்ளார். அ.தி.மு.க., ஆட்சியில், அமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தின் தம்பி ஓ.ராஜா நகராட்சி தலைவர் பதவிக்கு போட்டியிடுவதால், மக்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. பெரியகுளம் நகருக்கு அனைத்து வசதிகளும் கிடைக்கும் என்ற நம்பிக்கை எழுந்துள்ளது.பிரசாரம்: முதல் வார்டு முதல் 30 வது வார்டு வரை ஓ.ராஜா, அவரது மைத்துனர் சி.சரவணன், மாவட்ட அவைத்தலைவர் நல்லவேலுச்சாமி, இளைஞர் பாசறை மாவட்ட செயலாளர் ஓ.பி.ரவீந்திரநாத்குமார், கிறிஸ்தவ பெரியவர்கள், அனைத்து சமுதாய தலைவர்கள், மாவட்ட சிறுபான்மை பிரிவு செயலாளர் அபுதாஹிர், ஜெ., பேரவை இணை செயலாளர் முருகானந்தம், நகர செயலாளர் ராதா, பொருளாளர் பொன் ரங்கராஜ், துணை செயலாளர் அப்துல்சமது, முன்னாள் கவுன்சிலர்கள் சுந்தர், கிட்டு, வார்டு செயலாளர்கள், கவுன்சிலர் வேட்பாளர்கள் மற்றும் தொண்டர்களுடன் சென்று பிரசாரம் செய்து வருகிறார்.



ஓ.ராஜா கூறியதாவது:நான் நகராட்சி தலைவராக பொறுப்பேற்றால், அனைத்து தரப்பு மக்களின் வாழ்க்கை தரத்தையும் மேம்படுத்தும் வகையில், ஊழல் இல்லாத வெளிப்படையான நிர்வாகம் வழங்குவேன். அ.தி.மு.க., அரசு செயல்படுத்தி வரும் அத்தனை நலத்திட்டங்களையும் நகராட்சி மக்கள் அத்தனை பேருக்கும் பெற்றுத்தருவேன்.கோவில், சர்ச், பள்ளிவாசல் மற்றும் அனைத்து பள்ளிகளுக்கும் இலவசமாக குடிநீர் குழாய் இணைப்பு வழங்கப்படும். சோத்துப்பாறையிலிருந்து- குழாய்தொட்டி வரைக்கும் குழாய் அமைத்து, சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்குவேன். தெருவிளக்குகள், ரோடு வசதிகள் மேம்படுத்தப்படும். பிறப்பு, இறப்பு சான்றிதழ் உடனடியாக வழங்கப்படும். காலி வீட்டு மனைகளுக்கு பிளான் அப்ரூவல் உடனடியாக கொடுக்கப்படும். வராகநதி சுத்தப்படுத்தப்படும், ஆடுபாலம் அருகே தரைப்பாலம் அமைத்து கொடுப்பேன். ஆற்று ஓரங்களில் நவீன கழிப்பிட வசதி செய்து தரப்படும். நவீன மின்சார மயானம் அமைத்து தரப்படும். அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மூலம் அரசிடம் நிதி உதவி பெற்று நலத்திட்டங்கள் கிடைக்க ஏற்பாடு செய்வேன். அனைத்து மக்களக்கும் சமஉரிமை பெற்றுத்தருவதற்காக 24 மணி நேரமும் பாடுபடுவேன்,'என்றார்.







      Our Apps Available On




      Dinamalar

      Follow us