/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/போக்குவரத்து பிரச்னை ஆலோசனைக் கூட்டம்போக்குவரத்து பிரச்னை ஆலோசனைக் கூட்டம்
போக்குவரத்து பிரச்னை ஆலோசனைக் கூட்டம்
போக்குவரத்து பிரச்னை ஆலோசனைக் கூட்டம்
போக்குவரத்து பிரச்னை ஆலோசனைக் கூட்டம்
ADDED : ஆக 01, 2011 01:29 AM
விழுப்புரம் : விழுப்புரத்தில் பஸ், லாரி, வேன், ஆட்டோ ஓட்டுனர்கள் மற்றும் உரிமையாளர்களுக்கான ஆலோசனைக் கூட்டம் நடந்தது.கூட்டத்திற்கு டி.எஸ்.பி., சேகர் தலைமை தாங்கினார்.
தாசில்தார் ஜவகர், நகராட்சி கமிஷனர் சிவக்குமார், போக்குவரத்து ஆய்வாளர் அருணாச்சலம் முன்னிலை வகித்தனர்.இதில் பஸ் மற்றும் ஆட்டோக்களை குறிப்பிட்ட இடத்தில் மட்டும் நிறுத்தி பயணிகளை ஏற்றி இறக்க வேண்டும். புதுச்சேரியிலிருந்து வரும் பஸ்கள் அனைத்தும் பழைய பஸ் நிலையத்திற்குள் சென்று வர வேண்டும் என்று தீர்மானிக்கப்பட்டது.கூட்டத்தில் போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் தமிழ்மாறன், செந்தில் வினாயகம், ஷியாம் சுந்தர், போக்குவரத்து சப்-இன்ஸ் பெக்டர்கள் வசந்த், கலைச்செல்வி, வி.ஏ.ஓ., சின்னப்பன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.