/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/திருப்பூர் ஒன்றியத்தில் 13 ஊராட்சிகள்தேர்தலுக்கு ஆயத்தம்திருப்பூர் ஒன்றியத்தில் 13 ஊராட்சிகள்தேர்தலுக்கு ஆயத்தம்
திருப்பூர் ஒன்றியத்தில் 13 ஊராட்சிகள்தேர்தலுக்கு ஆயத்தம்
திருப்பூர் ஒன்றியத்தில் 13 ஊராட்சிகள்தேர்தலுக்கு ஆயத்தம்
திருப்பூர் ஒன்றியத்தில் 13 ஊராட்சிகள்தேர்தலுக்கு ஆயத்தம்
ADDED : ஜூலை 24, 2011 02:05 AM
திருப்பூர் :திருப்பூர் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள 21 ஊராட்சிகளில், எட்டு ஊராட்சிகள் மாநக ராட்சியுடன் இணைகின்றன; மீதி 13 ஊராட்சிகள், 114 'சிங்கிள்' வார்டுகளுடன் உள்ளாட்சி தேர்தலுக்கு தயாராகின்றன.திருப்பூர் ஊராட்சியில் இருந்து செட்டிபாளையம், தொட்டிபாளையம், நெருப்பெரிச்சல், தொட்டிய மண்ணரை, முத்தணம் பாளையம், வீரபாண்டி, முருகம்பாளையம், ஆண்டிபாளையம் ஆகிய எட்டு ஊராட்சிகள் மாநகராட்சியுடன் இணைகின்றன.
மீதியுள்ள 13 ஊராட்சிகளில், மக்கள் தொகை அடிப்படையில் 'சிங்கிள்' வார்டுகளாக பிரிக்கப்பட்டு அரசு ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.மக்கள் தொகை 4,000 வரை இருந்தால் ஆறு வார்டுகள்; 6,000 வரை இருந்தால் ஒன்பது வார்டுகள்; 8,000 வரை இருந்தால் 10 வார்டு கள்; மக்கள்தொகை 10 ஆயிரத்துக்குள் இருந் தால், 12 வார்டுகள்; 10 ஆயிரத்துக்கும் அதிக மாக இருந்தால், 15 வார்டுகள் என்ற அடிப்படையில் சிங்கிள் வார்டுகள் பிரிக்கப்பட்டன.மக்கள்தொகை 10 ஆயிரத்துக்கும் அதிகமாக உள்ள மங்கலம் ஊராட்சியில், 15 வார்டு கள் பிரிக்கப்பட்டுள்ளன. அடுத்ததாக முதலிபாளையம் ஊராட்சியில் 12 வார்டுகள் பிரிக்கப்பட்டுள்ளன. பெருமாநல்லூர், ஈட்டி வீரம்பாளையம், பொங்குபாளையம், கணக்கம்பாளையம், இடுவாய், வள்ளிபுரம், மேற்குபதி ஆகிய ஊராட்சிகள் தலா ஒன்பது வார்டுகளுடன் அமைக்கப்பட்டுள் ளன. பட்டம்பாளையம், சொக்கனூர், தொர வலூர், காளிபாளையம் ஆகிய ஊராட்சிகள் தலா ஆறு வார்டுகளுடன் உள்ளன.வார்டு பிரிப்பு குறித்த கருத்துரு, அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது; அரசாணை வெளிவந்த பின், உள்ளாட்சி தேர்தல் புதிய வார்டுகள் அடிப்படையில் நடக்கும் என, அதிகாரிகள் தெரிவித்தனர்.


