ADDED : அக் 08, 2011 11:14 PM
ஸ்ரீவில்லிபுத்தூர் : ஸ்ரீவி., தேவேந்திரகுல வேளாளர் அரசு பணியாளர் நற்பணி சங்கத்தின் ஆண்டு விழா தலைவர் ஜெயபாலன் தலைமையில் நடந்தது.
மாரிமுத்து, பொன்னுசாமி முன்னிலை வகித்தனர். துணை பொது செயலாளர் சுப்பையா வரவேற்றார். பொது செயலாளர் வீரணன் ஆண்டறிக்கை வாசித்தார். பொருளாளர் மோகன்தாஸ் நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்தார்.பொன்னுபாண்டி எம்.எல்.ஏ., டாக்டர் சண்முகநாதன், மாதவரான் கலந்துகொண்டனர். 10,12ம் வகுப் புகளில் முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.


