Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கடலூர்/போட்டியிட ஆள் இல்லாததால் பா.ம.க., 2 நகராட்சிகளில் மட்டுமே போட்டி

போட்டியிட ஆள் இல்லாததால் பா.ம.க., 2 நகராட்சிகளில் மட்டுமே போட்டி

போட்டியிட ஆள் இல்லாததால் பா.ம.க., 2 நகராட்சிகளில் மட்டுமே போட்டி

போட்டியிட ஆள் இல்லாததால் பா.ம.க., 2 நகராட்சிகளில் மட்டுமே போட்டி

ADDED : அக் 03, 2011 03:33 AM


Google News

கடலூர் : கடலூர் மாவட்டத்தில் உள்ள 5 நகர மன்ற தலைவர் பதவிகளுக்கு 3 இடங்களில் போட்டியிடாமல் பா.ம.க., பின் வாங்கியுள்ளது.

தமிழகத்திலேயே வட மாவட்டங்களில் வன்னியர் அதிகம் வசிக்கும் பகுதியாக உள்ளது.

அவற்றில் கடலூர், விழுப்புரம் மாவட்டம் கோட்டையாக கருதி வந்தனர். மாநில அளவில் நடந்த இட ஒதுக்கீடு போராட்டத்தில் கடலூர், விழுப்புரம் மாவட்டங்கள் ஸ்தம்பித்து போனது.இதனால் பா.ம.க., கூட்டணி இல்லாமல் யாரும் ஆட்சிக்கு வரமுடியாது என அக்கட்சியினர் வீராவேசம் பேசி வந்தனர்.

ஒவ்வொரு தேர்தலிலும் அணி மாறி பிரதான கட்சிகளுடன் கூட்டணி அமைத்து வெற்றி பெற்று வந்த பா.ம.க., கடந்த 2009ல் நடந்த லோக்சபா தேர்தலில் அ.தி.மு.க., வுடன் கூட்டணி அமைத்து படுதோல்வியை சந்தித்தது. இந்த தேர்தல் முடிவுக்குப் பின்னர் பா.ம.க., மிகப்பெரிய சரிவு நிலையை சந்தித்து வருகிறது. அதைத் தொடர்ந்து சட்டபைத் தேர்தலில் தி.மு.க., வுடன் கூட்டணி அமைத்து 30 இடங்களில் போட்டியிட்டு வெறும் 3 இடங்களை மட்டுமே பிடித்தது.

நடந்து முடிந்த தேர்தலில் ஜாதிக் கட்சிகள் முழுவதும் தமது செல்வாக்கை இழந்தன. இந்நிலையில் உள்ளாட்சித் தேர்தலில் பா.ம.க., தனித்து போட்டியிட்டு பெருவாரியான இடங்களை கைப்பற்றும் என கூறினார். பா.ம.க., வின் உண்மையான பலம் என்ன என்பது இந்தத் தேர்தல் மூலம் நிரூபணமாகிவிடும் என எதிர்கட்சியினர் ஆவலோடு இருந்தனர். இதற்கிடையே கடலூர் மாவட்டத்தில் பல உள்ளாட்சி பதவியிடங்களுக்கு போட்டியிட ஆளில்லாமலும், அப்படியே போட்டியிட்டால் வெற்றி பெறுவோமா என்ற சந்தேகத்தாலும் மனு தாக்கல் செ#யாமல் ஜகா வாங்கியது வெட்ட வெளிச்சமாகியுள்ளது.

கடலூர் மாவட்டத்தில் கடலூர், சிதம்பரம், விருத்தாசலம், பண்ருட்டி, நெல்லிக்குப்பம் நகராட்சிகள் உள்ளன. இதில் கடந்த உள்ளாட்சித் தேர்தலில் விருத்தாசலம் நகராட்சி, மாவட்ட குழு சேர்மன் ஆகிய இரண்டு இடங்களில் பா.ம.க., பதவி வகித்து வந்தது. தற்போது இம்மாவட்டத்தில் 5 நகர மன்ற தலைவர் பதவியிடங்களும், 174 நகர மன்ற உறுப்பினர் பதவியிடங்களுக்கும் தேர்தல் அறிவிக்கப்பட்டது. அதில் 63 பேர் சேர்மன் பதவியிடங்களுக்கும், 1,243 பேர் உறுப்பினர் பதவியிடங்களுக்கும் மனு தாக்கல் செய்துள்ளனர்.

இதில் சிதம்பரம், விருத்தாசலம் நகராட்சிகளில் மட்டுமே பா.ம.க., போட்டியிடுகிறது. நெல்லிக்குப்பம், பண்ருட்டி நகராட்சிகளில் மனு தாக்கல் செய்யப்படவே இல்லை. கடலூரில் அறிவிக்கப்பட்ட வேட்பாளர் திடீரென மாற்றப்பட்டதால் கடைசி நேர அவசரத்தில் நேரமின்மையால் உறுதி மொழிப்பத்திரம் இணைக்காததால் மனு தாக்கல் செய்யவில்லை. தமிழகத்தில் 2020ல் ஆட்சி அமைப்பதாக கூறி வந்த பெரிய கட்சியான பா.ம.க., பண்ருட்டியிலேயே சேர்மன் பதவிக்கு போட்டியிட ஆள் கிடைக்காமல் போனது தான் வேடிக்கை.







      Our Apps Available On




      Dinamalar

      Follow us