அன்பில் பெரியசாமிஜாமினில் விடுவிப்பு
அன்பில் பெரியசாமிஜாமினில் விடுவிப்பு
அன்பில் பெரியசாமிஜாமினில் விடுவிப்பு
ADDED : அக் 07, 2011 11:10 PM
கடலூர்:நில அபகரிப்பு வழக்கில் கைதாகி கடலூர் மத்திய சிறையில் இருந்த
முன்னாள் எம்.எல்.ஏ., அன்பில் பெரியசாமி நேற்று மாலை நிபந்தனை ஜாமினில்
விடுவிக்கப்பட்டார்.நில அபகரிப்பு தொடர்பாக முன்னாள் அமைச்சர் நேரு,
முன்னாள் எம்.எல்.ஏ., அன்பில் பெரியசாமி, சுந்தரராஜூலு உள்ளிட்டோர் கைது
செய்து கடலூர் மத்திய சிறையில் காவலில் வைக்கப்பட்டிருந்தனர்.
இந்நிலையில்
அன்பில் பெரியசாமி, சுந்தரராஜூலு ஆகியோருக்கு மதுரை ஐகோர்ட் கிளை நிபந்தனை
ஜாமின் வழங்கியது.அதனையொட்டி கடலூர் மத்திய சிறையில் இருந்த அன்பில்
பெரியசாமி, சுந்தரராஜூலு ஆகியோர் நேற்று மாலை விடுவிக்கப்பட்டனர். இவர்கள்
இருவரும் வரும் 10ம் தேதி முதல் மதுரையில் தங்கியிருந்து அங்குள்ள
மாஜிஸ்திரேட் கோர்ட்டில் தினசரி கையெழுத்திட வேண்டும்.


