ADDED : செப் 04, 2011 11:31 PM
தியாகதுருகம் : தியாகதுருகத்தில் விநாயகர் சிலை ஊர்வலம் நேற்று நடந்தது.
விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு தியாகதுருகத்தில் 9 இடங் களில் விநாயகர் சிலைகளை வைத்து நகர விழா குழுவினர் வைத் திருந்தனர். காலை மாலை இருவேளைகளிலும் சிறப்பு பூஜைகள் செய்தனர். நேற்று காலை விநாயகர் சிலைகள் மேள தாளத்துடன் முக்கிய வீதிகள் வழியே ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டது. அத்துடன் வீட்டில் வைத்து வழிபாடு நடத்திய களிமண் விநாயகர் சிலைகளை நீரில் கரைப் பதற்காக ஊர்வலத்தில் சென்ற வாகனங்களில் வைத்தனர். தியாகதுருகம், பெரியமாம்பட்டு, புக்குளம், உதயமாம்பட்டு, காந்திநகர் உள்ளிட்ட பகுதிகளில் வைத் திருந்த விநாயகர் சிலைகள் வாகனங்களில் எடுத்து செல்லப்பட்டு கோமுகி அணையில் விசர்ஜனம் செய்தனர்.


