/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/இந்திரா நகர் வாக்காளர்களுக்குபூத் சிலிப் வழங்கும் பணி துவக்கம்இந்திரா நகர் வாக்காளர்களுக்குபூத் சிலிப் வழங்கும் பணி துவக்கம்
இந்திரா நகர் வாக்காளர்களுக்குபூத் சிலிப் வழங்கும் பணி துவக்கம்
இந்திரா நகர் வாக்காளர்களுக்குபூத் சிலிப் வழங்கும் பணி துவக்கம்
இந்திரா நகர் வாக்காளர்களுக்குபூத் சிலிப் வழங்கும் பணி துவக்கம்
ADDED : அக் 08, 2011 12:23 AM
புதுச்சேரி:இந்திராநகர் தொகுதி வாக்காளர்களுக்கு பூத் சிலிப் வழங்கும் பணி
நடந்தது.இந்திராநகர் தொகுதி இடைத்தேர்தல் வரும் 13ம் தேதி நடக்கிறது.
தேர்தலை முன்னிட்டு தொகுதியிலுள்ள அனைத்து வாக்காளர்களுக்கும் தேர்தல் துறை
சார்பில் வாக்காளர் சீட்டு(பூத் சிலிப்) வழங்கும் பணி கடந்த 3ம் தேதி
துவங்கியது.
கோரிமேடு போலீஸ் குடியிருப்பில் வாக்குச்சாவடி நிலைய அதிகாரி மூலம்
வாக்காளர் பட்டியல் சரி பார்க்கப்பட்டு வீடு வீடாக பூத் சிலிப் நேற்று
வழங்கப்பட்டது. தொகுதிக்கு உட்பட்ட அனைத்து வார்டுகளிலும் நேற்று பூத்
சிலிப் வழங்கப்பட்டது. விடுபட்டவர்கள் வரும் 11ம் தேதி (திங்கள் கிழமை) வரை
சம்பந்தப்பட்ட அங்கன்வாடி மையத்தில் நேரடியாக பெற்றுக்கொள்வதற்கு தேர்தல்
துறை ஏற்பாடு செய்துள்ளது.


