வெள்ளை கழிச்சல் நோய் பரவலால்:நாட்டுக் கோழிகள் பலி அதிகரிப்பு
வெள்ளை கழிச்சல் நோய் பரவலால்:நாட்டுக் கோழிகள் பலி அதிகரிப்பு
வெள்ளை கழிச்சல் நோய் பரவலால்:நாட்டுக் கோழிகள் பலி அதிகரிப்பு
ADDED : அக் 09, 2011 02:07 AM
ராமநாதபுரம்;ராமநாதபுரம் மாவட்டத்தில், தடுப்பூசி போடாத காரணத்தால், ஆயிரக்கணக்கான கோழிகள் இறந்து வருகின்றன.
இதனால், நாட்டுக் கோழிகளின் விலை வீழ்ச்சியடையும் நிலை ஏற்பட்டுள்ளது.கால்நடை மருத்துவமனையில் கோழிகளுக்கு வாரந்தோறும் தடுப்பூசி போடப்பட்டு வந்தநிலையில், கடந்த இரண்டு மாதங்களாக, தடுப்பூசி (ஆர்.டி.வி.கே.,) போடுவது நிறுத்தப்பட்டுள்ளது. இதனால், கோழிகளுக்கு வெள்ளை கழிச்சல் நோய் பரவி வருகிறது. ராமநாதபுரம் மாவட்டம் முழுவதும் இதுவரை, 2,000க்கும் மேற்பட்ட கோழிகள் இறந்துள்ளன. 5,000க்கும் அதிகமான கோழிகள் பாதிக்கப்பட்டுள்ளன.கால்நடை டாக்டர் ஒருவர் கூறுகையில், ''தமிழ்நாடு முழுவதும் தற்போது, தடுப்பூசி வினியோகம் நிறுத்தப்பட்டுள்ளது. கடைகளிலும் கிடைக்கவில்லை,'' என்றார்.நோய் தாக்கிய கோழிகளை, கிடைத்த விலைக்கு சிலர் விற்று வருகின்றனர்.


