Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/வீட்டுவரி விதிப்புகளில் முறைகேடுகளை தவிர்க்க நடவடிக்கை தேவை

வீட்டுவரி விதிப்புகளில் முறைகேடுகளை தவிர்க்க நடவடிக்கை தேவை

வீட்டுவரி விதிப்புகளில் முறைகேடுகளை தவிர்க்க நடவடிக்கை தேவை

வீட்டுவரி விதிப்புகளில் முறைகேடுகளை தவிர்க்க நடவடிக்கை தேவை

ADDED : ஜூலை 19, 2011 09:55 PM


Google News

மடத்துக்குளம் : வீட்டுவரி விதிப்புகளில் பல்வேறு முறைகேடுகள் நடப்பதை தவிர்க்கும் வகையில் இது குறித்த தகவல்களை பொதுமக்கள் பார்வைக்கு தெரியும் வகையில் ஊராட்சி மற்றும் பேரூராட்சி அலுவலகங்களில் எழுதி வைக்க வேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.புதிதாக வீடு கட்டுபவர்கள் கட்டிய வீடு குறித்த தகவல்களை சம்பந்தப்பட்ட ஊராட்சிக்கு தெரிவித்து, வீடுகளுக்கு குறிப்பிட்ட தொகை செலுத்தி வரிவிதிப்பு செய்து ரசீது பெறுவது வழக்கம்.

ஊராட்சி மற்றும் பேரூராட்சிகளிடமிருந்து பெறும் ரசீதையும், ஆட்சேபணையின்மை(என்.ஒ.சி.) கடிதத்தையும் மின்வாரியத்தில் வழங்கினால் தான் புதிதாக கட்டப்பட்ட வீடுகளுக்கு மின் இணைப்பும், குடிநீர் உள்ளிட்டவை அரசால் வழங்கப்படும் இதர வசதிகளும் கிடைக்கும். இது நடைமுறையில் உள்ளது.பொதுவாக குறிப்பிட்ட இடத்தில் வீடுகட்டுமானப்பணிகள் முடித்து கட்டடத்துக்காக பிளான் மற்றும் பொறியாளர் மதிப்பீட்டுடன் வீட்டுவரிக்காக விண்ணப்பிக்கலாம். கட்டப்பட்ட வீட்டை ஆய்வு செய்த பின் கிராம ஊராட்சி எல்லைக்குட்பட்டதாக இருப்பின் சதுரமீட்டருக்கு ரூ.15ம் மற்றும் ஆய்வு கட்டணமாக ரூ.250ம் சேர்த்து வீட்டுவரி விதிக்கப்படும். பேரூராட்சியாக இருந்தால் அதற்கு தக்கபடி வரி விதிப்பு செய்து ரசீது வழங்கப்படும். வீட்டுவரி என்பது வீடு கட்டப்பட்ட இடத்துக்கு அரசிடம் அனுமதி வாங்குவது போன்றது. குறிப்பிட்ட தொகை செலுத்தி வீட்டுக்கு வரிவதிக்கப்பட்ட பின் தான் அப்பகுதிக்கு ஊராட்சி மற்றும் பேரூராட்சி நிர்வாகத்தால் ரோடு சாக்கடை மற்றும் தெருவிளக்கு வசதிகள் செய்யப்படும்.லே-அவுட்கள் அமைக்கும் போது சம்பந்தப்பட்ட ஊராட்சிகளிடம் அனுமதி பெறாமல் விற்பனை செய்திருந்தால் காலிமனையை விலைக்கு வாங்கியவர்கள் தங்கள் இடத்தில் கட்டிய வீட்டுக்கு மட்டும் தொகை செலுத்தி வீட்டுவரிவிதிப்பு செய்யலாம்.தற்போது பல்வேறு இடங்களில் முறையாக அனுமதி பெறாமல் லே-அவுட்கள் அமைத்து காலிமனையிடங்கள் விற்கப்படுகின்றன. இவற்றை அறியாமை காரணமாக பல்வேறு நபர்கள் விலைக்கு வாங்குவதுடன் வீடு கட்டுகின்றனர்.இது போல் வீடுகட்டுபவர்கள் வரிவிதிப்புக்காக ஊராட்சி மற்றும் பேரூராட்சி அலுவலர்களை அணுகும் போது, உங்கள் வீடு கட்டப்பட்ட லே-அவுட் அனுமதி பெறவில்லை என கூறுவதுடன், நடைமுறையில் இல்லாத பல நிபந்தனைகளை விதித்து மக்களை அலைக்கழிப்பு செய்வதால் பொதுமக்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.பொதுமக்கள் கூறியதாவது: வரிவிதிப்பு தொகை குறித்தும் நிபந்தனைகள் குறித்தும் பொதுமக்களுக்கு தெளிவாக தெரிவதில்லை. கிராமப்பகுதியில் வீடுகட்டுபவர்கள் அறியாமை காரணமாக வீட்டுவரிக்காக பல ஆயிக்கணக்கான ரூபாய் செலவிடும் நிலை உள்ளது. இவை குறித்து பொதுமக்கள் பார்வையில் படும்வகையில் அலுவலகத்தில் எழுதி வைக்க வேண்டும், என்றனர்.மடத்துக்குளம் ஒன்றிய அதிகாரிகள் கூறியதாவது:வரி விதிப்பு குறித்து பொதுமக்களுக்கு பயன்படும் வகையில் அனைத்து ஊராட்சி அலுவலகங்ளிலும் தொகை மற்றும் நிபந்தனைகள் பொதுமக்கள் பார்வையில் படும் படி எழுதி வைக்க அறிவுறுத்தப்படும். என்றனர். உள்ளாட்சி அமைப்புகளுக்கு யோசனை: புதியதாக கட்டப்படும் வீடுகளுக்கு வரிவிதிப்பு தொகையை வங்கி வரைவோலையாவோ அல்லது நேரில் கருவூலத்தில் கட்டும் படியாகவோ, பதிவு அஞ்சல் வழியாகவோ பெற்று சீனியாரிட்டி அடிப்படையில் வீடுகளை ஆய்வு செய்து ரசீது வழங்கலாம்.







      Our Apps Available On




      Dinamalar

      Follow us