ADDED : செப் 14, 2011 01:28 AM
சென்னை : சட்டசபையில் கேள்வி நேரத்தின் போது, முத்துராமலிங்கம், மேலூர் சாமி, கே.பி.கந்தன் உள்ளிட்ட உறுப்பினர்கள் கேட்ட கேள்விகளுக்கு சம்பந்தப்பட்ட துறை அமைச்சர்கள் பதிலளித்து, வெளியிட்ட அறிவிப்புகள்:கூட்டுவுறத்துறை அமைச்சர் செல்லூர் ராஜு: தமிழகத்தில் பத்து தாசில்தார் அலுவலகங்கள் வாடகை கட்டடத்தில் இயங்குகின்றன.
இரண்டு அலுவலகம் மற்ற துறைகளின் கட்டடத்தில் இயங்குகின்றன. வாடகை கட்டத்தில் இயங்கும் தாசில்தார் அலுவலகத்திற்கு முன்னுரிமை அளிக்கப்பட்டு புதிய கட்டடம் கட்டித்தரப்படும்.சமூகநலத்துறை அமைச்சர் செல்வி ராமஜெயம்: காஞ்சிபுரம் மாவட்டம், சோழிங்கநல்லூர் தொகுதி, ஒக்கியம் துரைபாக்கம் ஊராட்சி, கண்ணகி நகர் பகுதியிலுள்ள துவக்கப்பள்ளியில் சத்துணவு கூடம் அமைக்க, 2 லட்சத்து, 50 ஆயிரம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.அதேபகுதியில் உள்ள அரசு உயர்நிலைப்பள்ளியில் சத்துணவு கூடம் அமைக்க, 2 லட்சத்து, 75 ஆயிரம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. விரைவில் பணிகள் துவக்கப்படும்.


