Dinamalar Logo

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/வாராவாரம்/அவியல்/கல்லும் கலையும்: ராஜவாத்தியத்தின் தனி ஆவர்த்தனம்!

கல்லும் கலையும்: ராஜவாத்தியத்தின் தனி ஆவர்த்தனம்!

கல்லும் கலையும்: ராஜவாத்தியத்தின் தனி ஆவர்த்தனம்!


PUBLISHED ON : அக் 14, 2025

Follow on Google

PUBLISHED ON : அக் 14, 2025


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

வெட்டுவான்கோவில் கோபுர சிகரம்; அதில், தெற்கு நோக்கி அமர்ந்து மிருதங்கம் இசைக்கும் ஒரு சிற்பம். தான் எழுப்பும் இசையை பாறைகளில் மோதவும், காற்றில் புரளவும், காலத்தில் கரைந்து போகவும் செய்யும் அவ்விரல் வித்தகரின் நாமம்... தட்சிணாமூர்த்தி!

கோவில்பட்டி - சங்கரன்கோவில் சாலையின் கழுகுமலையின் வடபுறத்தில் உள்ளது வெட்டுவான்கோவில்.

கோபுரத்தின் தெற்குபக்கத்தில் வலதுகால் மடித்து, இடதுகாலை தொங்க விட்டு ஒய்யாரமாக மிருதங்கம் வாசித்துக் கொண்டிருக்கிறார் தட்சிணாமூர்த்தி! தொங்கும் இடதுகால் 'அறியாமை' எனும் குள்ள அரக்கனை மிதித்திருக்கிறது!

நான்கு கரங்களுடன் இந்த தட்சிணாமூர்த்தி; பின்னிரு கரங்களில் வலக்கரம் பரசுவைத் தாங்க, இடக்கரத்தில் ருத்ராட்ச மாலை; முன்னிரு கரங்களில் வலக்கரம் மிருதங்கம் இசைக்க, இசைக்கருவியை அணைத்திருக்கும் இடக்கரத்தின் விரல்களை சிதைத்திருக்கிறது காலம்!

'சுருள்முடியுடன் ஜடாபாரம்; காதில் பத்ரகுண்டம்; கழுத்தில் பதக்கம், முத்தாரம்; இடையில்... கற்கள் பதிக்கப்பட்ட அரைப்பட்டை; கீழ்நோக்கிய பார்வையுடன் சற்றே வலப்புறம் சாய்ந்திருக்கும் முகத்தில் சிற்பியின் திறன் சொல்லும் புன்முறுவலை கவனித்தீர்களா' என்கிறார் ஓய்வுபெற்ற தொல்லியல்துறை காப்பாட்சியர் செ.மா.கணபதி.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow



  • சினிமா
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • புத்தகங்கள்
  • உலக தமிழர்

mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
Download on the app store
Download on the app store

Dinamalar
Follow us
Copyright © 2026Contact us
Terms & Conditions
Sitemap