Dinamalar Logo

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/வாராவாரம்/பட்டம்/சரித்திர சங்கமம்: சரித்திரக் குறிப்புகள் எழுதிய திவான்

சரித்திர சங்கமம்: சரித்திரக் குறிப்புகள் எழுதிய திவான்

சரித்திர சங்கமம்: சரித்திரக் குறிப்புகள் எழுதிய திவான்


PUBLISHED ON : ஏப் 27, 2026

Follow on Google

PUBLISHED ON : ஏப் 27, 2026


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

பெரம்பூரில் சென்னை டுபரம் பூரில் கடம் பிள்ளை என்பவருக்கு மகனாகப் பிறந்தவர் இவர். இவரது உறவினர் பாண்டிச்சேரியில் அரசு பதவியில் இருந்தார். இதனால் குடும்பம் பாண்டிச்சேரிக்குக் குடிபெயர்ந்தது. உறவினரின் உதவியால் பாண்டிச்சேரியில் வணிகத்தில் ஈடுபட்டார் திருவேங்கடம் பிள்ளை.

விரைவிலேயே பாண்டிச்சேரியின் திவான் (உயர் அதிகாரி) பொறுப்பும் அவருக்குக் கிடைத்தது. தந்தையின் வழிகாட்டுதலில் இவரும் வணிகத்தில் ஈடுபட்டார். மக்கள் செல்வாக்குமிக்கவராக மாறினார். தந்தையின் மறைவிற்குப் பிறகு பாண்டிச்சேரி திவான் பொறுப்பை இவர் ஏற்றுக்கொண்டார்.

பாண்டிச்சேரி ஆளுநர் டூப்ளேயின் தலைமை மொழிபெயர்ப்பாளராக (துபாஷி) இவர் நியமிக்கப்பட்டார். ஆலோசகராகவும் இருந்தார். துணி வர்த்தகமும் செய்தார். அச்சுக்கூடங்களை நடத்தினார். 'ஆனந்தப் புரவி' என்ற கப்பலை வாங்கி, ஐரோப்பிய, சீன நாடுகளுடன் வர்த்தகமும் செய்தார்.

இலக்கியவாதியான இவர், புலவர்களை ஆதரித்தார். இவர் தமிழ், தெலுங்கு, உருது, பிரெஞ்சு, ஆங்கிலம் ஆகிய மொழிகளை நன்கு அறிந்திருந்தார். பாடல்கள் எழுதுவதிலும் வல்லவர். நாட்குறிப்பு எழுதுவதையும் வழக்கமாகக் தக கொண்டிருந்தார். இது பின்னர் சரித்திர ஆவணமானது. தங்கள் நூல்களை இவருக்குச் சமர்ப்பணம் (அர்ப்பணிப்பு) செய்து, பல புலவர்கள் வெளியிட்டனர்.

வணிகர்கள் தங்குவதற்கு விடுதிகளையும் வழிப்போக்கர்கள் தங்குவதற்குச் சத்திரங்களையும் கட்டினார். 1761 ஜனவரி 11இல் இயற்கை எய்தினார்.

யார் இவர்?

விடை: ஆனந்தரங்கம் பிள்ளை.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us