/வாராவாரம்/சிந்திப்போமா/800 பாரம்பரிய விதை ரகங்கள் மீட்டுருவாக்கம் செய்துள்ளோம்!800 பாரம்பரிய விதை ரகங்கள் மீட்டுருவாக்கம் செய்துள்ளோம்!
800 பாரம்பரிய விதை ரகங்கள் மீட்டுருவாக்கம் செய்துள்ளோம்!
800 பாரம்பரிய விதை ரகங்கள் மீட்டுருவாக்கம் செய்துள்ளோம்!
800 பாரம்பரிய விதை ரகங்கள் மீட்டுருவாக்கம் செய்துள்ளோம்!

தபால் மூலம் பரவலான விதைகள்
கடந்த 2007 முதல், ஊர் ஊராக சென்று, பாரம்பரிய மரபு விதைகளை சேகரிக்க துவங்கினோம். அப்போதெல்லாம், சுய முகவரி எழுதிய தபால் ஒன்றை அனுப்பினால் அதன் மூலம், விதையை எங்களுக்கு அனுப்பி வைத்தனர். சில கிராமங்களில், 40 ஆண்டுகள் வரை பராமரித்து பாதுகாக்கப்பட்ட விதைகளை விவசாயிகளிடம் இருந்து பெற்றுள்ளோம்; பராமரித்து வருகிறோம். விதை என்பது வெறும் பொருள் அல்ல; எதிர்காலம். எங்களுக்கு, பொன் முட்டையிடும் வாத்து; செடியின் முதல் காயில் இருந்து விதை எடுக்கக்கூடாது; மூன்றாவது அறுவடையில் இருந்து விதை எடுக்கலாம்.
விளைவித்து உண்ண வேண்டும்
விதை எடுப்பதற்காக மட்டும் வீட்டுத்தோட்டம் வைத்திருந்தால், அதில் எவ்வித பயனும் இல்லை; வீட்டுத்தோட்டத்தில் விளைந்த காய்கறிகளை நாம் சமைத்து உண்ண வேண்டும். அப்போதுதான், வீட்டுத்தோட்டம் அமைப்பவர் வெற்றி பெற முடியும். அதற்கு பிறகே, விதையை சேகரித்து வைக்கலாம்.
மண் சார்ந்த மரபு ரக விதைகள்
வீட்டுத்தோட்டத்தில் நன்கு வளர்ந்து, அதிக மகசூல் கொடுக்கும் ரகமே, மண் சார்ந்த ரகம் என்பதை உறுதி செய்யலாம். ஆயிரம் ரகம் வளர்ந்தாலும், மண் சார்ந்த ரகம் ஒரு சில மட்டும் கிடைக்கும். கத்தரி, பீர்க்கன், வெண்டை, தக்காளி, என, ஒவ்வொரு காய்கறியிலும் மண் சார்ந்த ரகங்களை எடுத்து பத்திரமாக வைக்க வேண்டும். நமது வாழ்நாள் முழுவதும் நம்முடன் இருக்க வேண்டும். பிறகு, அடுத்த தலைமுறையினருக்கும் மரபுசார் விதைகளை கொண்டு சேர்க்க வேண்டும்.
தக்காளியில் 70 ரகம் உண்டு
நாட்டு தக்காளி மட்டும், 70 வகை ரகங்கள் உள்ளன. ஆப்பிள் தக்காளி சதைப்பற்று அதிகம் இருக்கும். மஞ்சள் கோலி தக்காளியில், இனிப்புச்சுவை அதிகம். 'ஸ்பூன்' தக்காளி என்பது, மிகச் சிறிதாக இருக்கும்; ஒரு ஸ்பூனில் 10 தக்காளி வரை நிற்கும். திராட்சை போல் கொத்து கொத்தாக காய்க்கும் தக்காளி ரகங்களும் உள்ளன. சிவப்பு ரகத்தில் புளிப்பு இருக்கும்; மஞ்சள் ரகத்தில் இனிப்பு இருக்கும். இருதய வடிவ தக்காளி, பறித்து ஒன்றரை மாதமானாலும் கெடாது.
'ைஹப்ரீடு' ரகம் ஆகாது
தற்போது, மருந்து தெளிக்கப்பட்ட 'ைஹப்ரீடு' காய்கறிகள் அதிகம் விற்கப்படுகிறது. ஒரு சில ரகங்களை சாப்பிடவே கூடாது. காய்கறிகளை கழுவி பயன்படுத்தினாலும் ஊடுருவி வளர்ந்த காய்கறிகளில் நச்சுத்தன்மை நீங்காது.குடும்பம் ஆரோக்கியமாக இருக்க வேண்டும் என்ற ஆர்வம் இருந்தாலே, மரபுசார் விதைகளை பயன்படுத்த துவங்குவோம்; ஆரோக்கியத்தை உணர்வோம்.


