/வாராவாரம்/சிந்திப்போமா/அடுத்த தலைமுறைக்கு நாம் தரப்போகும் அபாயம்அடுத்த தலைமுறைக்கு நாம் தரப்போகும் அபாயம்
அடுத்த தலைமுறைக்கு நாம் தரப்போகும் அபாயம்
அடுத்த தலைமுறைக்கு நாம் தரப்போகும் அபாயம்
அடுத்த தலைமுறைக்கு நாம் தரப்போகும் அபாயம்

அச்சுறுத்தல்
நீரின் முக்கியத்துவம் அறிந்த நம் முன்னோர் குளம், ஏரி, அணைகளை உருவாக்கி நிலத்தடி நீரை உயர்த்தினர். அன்றைய மக்கள் தொகைக்கு ஏற்பவும் தொலைநோக்கு பார்வையுடனும், போதிய நீர் மேலாண்மையை நம் முன்னோர் கையாண்டதால் நாம் அதை தற்போதும் பயன்படுத்தி வருகிறோம். நம் சந்ததியினருக்கு நாம் விட்டுச் செல்லப் போவது என்ன? என்பதுதான் தற்போதைய கேள்வி. கடந்த, 30, 40 ஆண்டுகளுக்குமுன், திறந்தவெளி கிணறுகள் அதிகம் இருந்தன; குறைந்த அடியிலேயே நீர் எடுத்து பயன்படுத்தினர். தற்போது 90 சதவீத திறந்தவெளி கிணறுகள் வற்றி மறைந்துவிட்டன. ஆழ்துளை கிணறுகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளன. சில மாவட்டங்களில், 600 முதல் 1,000 அடி வரை ஆழ்துளை கிணறு தோண்டப்பட்டும் நீர் கிடைப்பதில்லை.
விழிக்கணும்
நிலத்தடி நீரை சேமிக்க நாம் முக்கியத்துவம் அளிக்க வேண்டும். அதிக மழை, அதிக வறட்சி என பருவநிலை சவால்களை எதிர்கொள்ளும் சூழலில், கிடைக்கும் மழை நீரை வீணாக்காமல் மீண்டும் பூமிக்குள் சுத்தமாக்கி அனுப்ப வேண்டும். தமிழ்நாடு வேளாண் பல்கலை நீர் நுட்ப மையம் சார்பில் மழை நீரை சுத்தமாக்கி மீண்டும் நிலத்துக்குள் அனுப்பி செறிவூட்ட, மூன்று தொழில்நுட்பங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
சொற்பம் தான்
தமிழக அரசு, பொதுமக்கள், விஞ்ஞானிகள், கல்வி நிறுவனங்கள், அரசு அலுவலகங்கள் என அனைத்தும் ஒன்றிணைந்து, போர்க்கால அடிப்படையில் செயல்பட வேண்டும். சிறிய கட்டமைப்பாக இருந்தாலும் மழை நீர் சேமிப்பு அவசியம். மழை நீர் கட்டமைப்பை அதிகம் உருவாக்குவதால் வெள்ள பாதிப்பின் அளவு குறைந்து, நிலத்தடி நீர் வளம் மேம்படும்.


