/வாராவாரம்/சிந்திப்போமா/'ஆட்டிசம்' பாதிப்புக்கு பயிற்சியே தீர்வு'ஆட்டிசம்' பாதிப்புக்கு பயிற்சியே தீர்வு
'ஆட்டிசம்' பாதிப்புக்கு பயிற்சியே தீர்வு
'ஆட்டிசம்' பாதிப்புக்கு பயிற்சியே தீர்வு
'ஆட்டிசம்' பாதிப்புக்கு பயிற்சியே தீர்வு

கவின் திருமுருகன்
கட்டுரையாளர், எம்.எஸ்.சி., உளவியல்மற்றும் சிறப்பு குழந்தைகளுக்கான பி.எட்., பட்டதாரி. கல்வி மற்றும் உளவியல் ஆலோசகர்.திருப்பூர், பெருமாநல்லுார் பகுதிகளில்சாய்கிருபா சிறப்பு பள்ளி நடத்துபவர். சிறப்பு மாணவர்களை பள்ளிகளில் சேர்த்து உயர்நிலைகல்வி பயில உதவி வருபவர். சிறப்பு மாணவர்களுக்கு கல்வி மற்றும் தொழிற்பயிற்சி அளிப்பவர்; இதற்காக, பல விருதுகளை பெற்றுள்ளவர்.
தனிப்பட்ட திறனை பாதிக்கும்
பிறந்த குழந்தை ஒவ்வொரு கால கட்டத்திலும் ஒரு நடைமுறையை கற்று வளருகிறது. அவ்வகையில் உறக்க நிலை, தவழுதல், கழுத்து நேராக நிற்றல், பேச்சு, உணர் திறன், சொல்வதைக் கேட்டு அதற்கு பதில் அல்லது உத்தரவை ஏற்று செயல்படுவது போன்றவற்றில் ஏற்படும் தொய்வு நிலை இதன் ஆரம்ப அறிகுறி. சராசரியாக 2 வயது என்ற அளவில் தான் இது குறித்து தெரிய வரும்.
'ஸ்பீச் தெரபி'யில் தீர்வு
பெருமளவு குழந்தைகள் பேச துவங்கும் காலத்தில் இதை அறிய முடியும். பேசுவதில் தாமதம் ஏற்படுதல், பேச்சு வந்த குழந்தை பின்னர் தடுமாறுதல் போன்றவையும் இதற்கான ஒரு அறிகுறி. இதற்கான தெரபிஸ்ட்டை அணுக வேண்டும். சிறு வயதில் குழந்தைகளுக்கு 'டி.வி.,' கம்ப்யூட்டர் மற்றும் மொபைல் போன்கள் பயன்படுத்தக் கொடுத்தாலும் இது போல் பேச்சு வருவது தாமதமாகலாம். இது ஒரு வகையான ஆட்டிசம் பாதிப்பு என்றாலும், 'ஸ்பீச் தெரபி' வாயிலாக இதற்கு தீர்வு காண முடியும். இந்த சிறப்பு நிலை குழந்தைகளுக்கு உடல் ரீதியான பாதிப்பு இருக்காது.
நல்ல முன்னேற்றம் ஏற்படும்
அவர்களிடமுள்ள திறமையை கண்டறிந்து பயிற்சி அளிக்கலாம். என்ன செயலில் பயிற்சி தேவை எனக் கண்டறிந்து வழங்க வேண்டும். அன்றாட வாழ்க்கைக்கான நடவடிக்கை முதல் அவர்களிடம் உள்ள தனித் திறனை வெளிக்கொண்டு வரும் வகையில், சிறப்பு ஆசிரியர்களை கொண்டு தகுந்த பயிற்சி வழங்கும் போது நல்ல முன்னேற்றம் ஏற்படும்.
விழிப்புணர்வு வேண்டும்
ஆட்டிசம் பாதிப்பு ஏற்படுவதற்கான முழுமையான காரணம் இது வரை கண்டறியப்படவில்லை. இருப்பினும், தவறான உணவு பழக்கம், நெருங்கிய ரத்த சொந்த உறவு முறை திருமணம், மிக அரிய வகை மரபணு கோளாறு, வயது தகுதிக்கு முன் தாய்மை அடைதல், கர்ப்ப கால நோய்கள், பிரசவ சிக்கல், சிசுவுக்கு போதிய ஆக்சிஜன் கிடைக்காதது போன்ற சில காரணங்களாலும் இந்த பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளது.
சிறப்பு பள்ளிகள் தேவை
கர்ப்ப காலத்தில் பின்பற்ற வேண்டிய நடவடிக்கைகள் குறித்து பயிற்சி வகுப்புகள் பல இடங்களிலும் தற்போது நடத்தப்படுகிறது. இது போன்ற பயிற்சிகளில் பங்கேற்பதன் வாயிலாகவும், ஆலோசனை வல்லுநர்களை அணுகியும் தீர்வு காணலாம். சிறப்பு நிலை குழந்தைகளுக்கு அரசு பள்ளிகளில் சேர்க்கை வழங்க வேண்டும். பெற்றோருக்கு உதவித் தொகையும் பல்வேறு சலுகைகளும் அரசு வழங்கி வருகிறது. சலுகைகள் முறையாக சென்று சேர வேண்டும்.


