/வாராவாரம்/உரத்த குரல்/மனசாட்சிப்படி மக்கள் தீர்ப்பு வழங்க வேண்டும்!மனசாட்சிப்படி மக்கள் தீர்ப்பு வழங்க வேண்டும்!
மனசாட்சிப்படி மக்கள் தீர்ப்பு வழங்க வேண்டும்!
மனசாட்சிப்படி மக்கள் தீர்ப்பு வழங்க வேண்டும்!
மனசாட்சிப்படி மக்கள் தீர்ப்பு வழங்க வேண்டும்!

ஊழல் இல்லாத இரு ஆளுமைகள்
திராவிடக் கட்சிகளில், அண்ணாதுரை, எம்.ஜி.ஆர்., ஆகிய இரு பெரும் தலைவர்கள், அரசியல் வாழ்வில், ஊழல் அற்ற தலைவர்களாக இருந்தனர் என்பதை யாரும் மறுக்க முடியாது. அவர்கள் மீது இன்றளவும், லஞ்சம், ஊழல் குற்றச்சாட்டுகள் இருந்ததில்லை.ஆனால், இவர்களுக்கு பின்பு, தி.மு.க., - அ.தி.மு.க., ஆகிய இரு கட்சிகளில், கருணாநிதி முதல், ஜெ., வரை இருவரும், மாறி மாறி ஆட்சியில் அமர்ந்தாலும், அண்ணாதுரை, எம்.ஜி.ஆர்., என்ற மக்கள் தலைவர்களுக்கு ஈடான ஆட்சியை வழங்க முடியவில்லை. இதற்கு முக்கிய காரணம், ஊழல் பெருச்சாளிகளுக்கு அவர்கள் சிவப்பு கம்பளம் விரித்து, அதில் இவர்களும் குளிர் காய்ந்ததாகும்.
வாக்காளர்களுக்கு என்ன விலை?
தொடர்ந்து, தேர்தல் காலங்களில், இரு கட்சித் தலைமைகளும், இலவசம் என்ற பெயரில், வாக்காளர்களுக்கு, அரிசி, மிக்சி, கிரைண்டர், இன்டெக் ஷன் ஸ்டவ், 'டிவி' என, பெரிய பட்டியலை போட்டி போட்டு வழங்கி, அவர்கள் எழ முடியாத மயக்கத்தில் விழச் செய்தனர். இதனால், தேர்தல் திருவிழாக்களில், 'காசு; பணம்; துட்டு; மணி... மணி' என்ற 'பார்முலாவை' வாக்காளர்கள் எதிர்பார்த்து காத்திருக்க வேண்டிய நிர்ப்பந்தத்தை உருவாக்கினர்.இந்த சூழ்நிலையில், 2016ல் டிச., மாதம் ஜெ.,வும்; 2018 ஆக., மாதம், கருணாநிதியும் மரணமடைந்தனர். இந்த நான்கு தலைவர்களில், 'ஊழல் அற்ற மற்றும் விஞ்ஞான ஊழல் செய்த' என, இரு வேறு பிம்பங்கள் இருந்தாலும், 1949 செப்., 17ல் அண்ணாதுரையால் உருவாக்கப்பட்டு, பின்பு, தி.மு.க., - அ.தி.மு.க., என இரு கட்சிகளாக மாறிய திராவிடக் கழகங்கள், அண்ணாதுரை, கருணாநிதி, எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகிய வலுவான ஆளுமையின் கீழ் தமிழகத்தில், மத்திய அரசால் கூட அசைக்க முடியாத ஆட்சி பீடத்தில் இருந்ததை யாரும் மறுக்க முடியாது.
முதன் முதலாக தள்ளாடும் தலைமை
இந்நிலையில், 2021ம் ஆண்டு நடக்கும் சட்டசபை தேர்தலில், தடுமாற்றமான தலைமைகளின் கீழ் தான், இரு திராவிடக் கழகங்களும் தேர்தலை சந்திக்கப் போகின்றன. 'கரிஸ்மாட்டிக் பர்சனாலட்டி' என்று கூறும், தலைமை இரு கழகங்களிலும் இல்லை.மேலும், அந்த நான்கு மாபெரும் தலைமையின் கீழ் நடந்த, அனல் பறக்கும் கூட்டங்களை, தற்போதைய அரசியல் தலைவர்களால் நிச்சயம் நடத்த முடியாது.


