/வாராவாரம்/உரத்த குரல்/கூட்டணியை ஒழிக்க அஸ்திரம் வீசுமா ஆணையம்கூட்டணியை ஒழிக்க அஸ்திரம் வீசுமா ஆணையம்
கூட்டணியை ஒழிக்க அஸ்திரம் வீசுமா ஆணையம்
கூட்டணியை ஒழிக்க அஸ்திரம் வீசுமா ஆணையம்
கூட்டணியை ஒழிக்க அஸ்திரம் வீசுமா ஆணையம்

மரியாதை
அரசியல் கட்சிகளின் இதுபோன்ற செயல்பாடுகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க தேர்தல் ஆணையம் இப்போதே நடவடிக்கை எடுத்தாக வேண்டும்.அதேபோல் கூட்டணி கலாசாரத்துக்கும் முற்றுப் புள்ளி வைக்க வேண்டிய காலகட்டம் வந்து விட்டது. இல்லையெனில் நல்லவர்கள் மக்கள் விரும்புபவர்கள் மக்கள் பிரதிநிதியாக வர முடியாத நிலை நிரந்தரமாகி விடும்.நடிகர் விஜயகாந்த் கட்சி ஆரம்பித்தபோது தனித்து போட்டியிட்டு எட்டு சதவீத ஓட்டுகளை அள்ளினார். தி.மு.க. - அ.தி.மு.க. ஆட்சி மீது வெறுப்பில் இருந்தவர்கள் நடுநிலையாளர்கள் விஜயகாந்த்தை தேர்வு செய்தனர். அவரால் ஆட்சி அதிகாரத்தை பெற முடியாததை உணர்ந்த அ.தி.மு.க. அடுத்த தேர்தலில் கூட்டணிக்குள் ஐக்கியமாக்கி ஆட்சியை கைப்பற்றியது.எந்தவொரு கட்சியும் தனித்து போட்டியிட்டு சுய பரிசோதனை செய்துகொள்ள விரும்புவதில்லை.ஏனெனில் அந்தக் கட்சிக்காரர்களே அவர்கள் கட்சி சார்ந்த வேட்பாளருக்கு ஓட்டு போடா விட்டால் மண்ணை கவ்வ வேண்டி வரும்; மானம் மரியாதை போய் விடும்.
அறிவிப்பு
எங்கள் கட்சியில் ஒன்றரை கோடி தொண்டர்கள் இருக்கின்றனர்; ஒரே நாளில் ஒரு கோடி உறுப்பினர்கள் இணைய வழியில் சேர்ந்திருக்கின்றனர் என கூப்பாடு போடுகின்றனரே தவிர எந்த கட்சிக்கும் தங்களது ஓட்டு வங்கியை மட்டும் வைத்து தனித்துப் போட்டியிட்டு வெற்றி பெற திராணி இல்லை.கூட்டணி என்கிற பெயரில் ஏகப்பட்ட கட்சிகளை சேர்த்துக் கொள்கின்றனர்; ஜாதி அமைப்புகளை அரவணைக்கின்றனர்; அந்தந்த தொகுதியில் உள்ள முக்கியஸ்தர்களிடம் மண்டியிட்டு கைகோர்த்து அவர் ஆதரவு எங்களுக்குதான் என மார்தட்டி வெற்றி பெறுகின்றனர்.
வெளுத்தது சாயம்!
கடந்த 2014 தேர்தலில் திராவிட கட்சிகளை தவிர்த்து இரு கம்யூ. கட்சிகளும் இணைந்து போட்டியிட்டன. அப்போதும் நடராஜனே களமிறங்கினார்; அவருக்கு 38,664 ஓட்டுகளே விழுந்தன. அதே மா.கம்யூ., 2019ல் நடந்த தேர்தலில் தி.மு.க.வுடன் கைகோர்த்து மீண்டும் தேர்தல் களம் கண்டது. எதிர்த்து போட்டியிட்டவரை காட்டிலும் 1,81,234 ஓட்டு அதிகம் பெற்று நடராஜன் வெற்றி பெற்றார். இத்தகைய வெற்றியை அவரே கூட எதிர்பார்க்கவில்லை.அதாவது 2009ல் அ.தி.மு.க. தயவால் வெற்றி; 2019ல் தி.மு.க. கூட்டணியால் வெற்றி; 2014ல் கம்யூ. சுயபரிசோதனை செய்தபோது பின்னுக்கு தள்ளப்பட்டது அக்கட்சி; இப்போது தனித்து நின்றால் அந்த ஓட்டு வங்கியும் கிடைக்குமா என்பதும் சந்தேகமே!இதை ஒவ்வொரு கட்சியும் நன்கு உணர்ந்திருப்பாலேயே கூட்டணி கணக்கு போட்டு கைகோர்க்கின்றன.
காத்திருப்பு
அதாவது ஒரு சட்டசபை தொகுதியில் 6 லட்சம் வாக்காளர்கள் இருக்கின்றனர்; 5 லட்சம் ஓட்டு பதிவாகிறது என உதாரணத்துக்கு எடுத்துக் கொள்வோம்.ஒரு வேட்பாளர் 2 லட்சம் ஓட்டு பெறுகிறார். மற்ற வேட்பாளர்கள் 1.5 லட்சம் ஒரு லட்சம் மற்றும் அதற்கு கீழாக மீதமுள்ள 3 லட்சம் ஓட்டுகளை பங்கிட்டுக் கொள்கிறார்கள் என வைத்துக் கொள்வோம்.மொத்தம் 6 லட்சம் வாக்காளர்கள் உள்ள தொகுதியில் 2 லட்சம் ஓட்டு மட்டுமே பெற்றவர் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்படுவார். அதாவது மூன்றில் ஒரு பங்கு ஓட்டு வாங்கியவர் வெற்றி பெற்றவராகி விடுகிறார்.


