/வாராவாரம்/உரத்த குரல்/தவறை உணர்த்துவதில் தவறில்லையே,ரஜினி சார்!தவறை உணர்த்துவதில் தவறில்லையே,ரஜினி சார்!
தவறை உணர்த்துவதில் தவறில்லையே,ரஜினி சார்!
தவறை உணர்த்துவதில் தவறில்லையே,ரஜினி சார்!
தவறை உணர்த்துவதில் தவறில்லையே,ரஜினி சார்!

இயக்கும் சக்தி
இப்போது, 'ட்விட்டர், பேஸ்புக்' ஆகிய சமூக வலைதளங்களில், கொச்சை வார்த்தைகளைப் பயன்படுத்தி, அநாகரிகமான வகையில், தனி மனித விமர்சனங்களை வைப்பதற்கு முன்னோடியாக விளங்கியது, சம்பந்தப்பட்ட அந்த முன்னணி அரசியல்வாதிகளே! அத்தகைய ஈனத்தனமான தனி மனித துாற்றல்கள் தான் தவறு; நேர்மையான, ஆரோக்கியமான கண்டன, விமர்சனங்களை முன் வைப்பதில் தவறில்லை. ரஜினி, மிகப் பெரிய ஆன்மிகவாதி. ஆன்மிகத்தில், கடவுளுக்கு, ஆர்ப்பாட்ட ஆராதனை செய்யச் சொல்லவே இல்லை.
வாழ்க்கைத் தத்துவம்
இந்த உண்மையைப் புரிந்து கொண்டவர் ரஜினி. எனவே, யாரிடமும் பேதம் பார்க்கக் கூடாது; யாரையும் பழிக்கக் கூடாது; யாரையும் துச்சமென மதிக்கக் கூடாது என்பதாக யோசிக்கிறார்.உங்கள் கூற்றை ஏற்றுக் கொள்கிறேன், ரஜினி சார்! ஆனால், உங்களிடம் இருந்த குறைகளைக் கண்டறிந்து நீக்கியதால் தான், உங்களால் ஆன்மிகத்திற்குள் நுழைய முடிந்தது என்பதை, நீங்கள் புரிந்து கொண்டீர்கள் அல்லவா! ஆன்மிகம் தான் வாழ்க்கைத் தத்துவம் என்பதையும் உணர்ந்தீர்கள் அல்லவா!
தற்காலிக சுகம்
கவுதம புத்தர், ஞானம் அடைவதற்கு முன், அரசராக இருந்தவர். ஓர் அரசருக்கு, 29 வயதுக்குள் எத்தனை எத்தனை போகங்கள் இருந்திருக்கக் கூடும் என்பதை நீங்கள் அறிவீர்கள். புத்தர் வாழ்க்கை வரலாறு படித்தவர்கள் அனைவரும் அதை அறிவர். சாலையில் சென்றபோது, அழுகிக் கொண்டிருந்த ஒரு பிணத்தையும், ஒரு முதியவரையும், நோய்வாய்ப்பட்ட ஒருவரையும் பார்த்ததும், 'ஓ... வாழ்க்கை இது தானா... துன்பம் தருகிறதே...' என்பதை உணர்ந்த பின், ஞானத்தைத் தேடத் துவங்கினார். தான் அனுபவித்த போகங்கள் அனைத்தும், தனக்குத் தற்காலிக சுகம் மட்டுமே தந்தன என்பதை உணர்ந்தார்.


