
பெருமை
அப்போதே,தமிழகத்தில் பல பத்திரிகை ஆசிரியர்கள் அவருக்கு நண்பர்களாக இருந்துள்ளனர்.அதில், துக்ளக் ஆசிரியர் 'சோ' மிகவும் நெருக்கமாக இருந்துள்ளார். முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, ரஜினி ஆகியோரும் சிறந்த நண்பர்களாக இருந்துள்ளனர். 2014ல் அவர் பிரதமரான பின், அவர் பங்கேற்ற பல நிகழ்ச்சியில், தமிழ்மொழியின் சிறப்புகளை பற்றியும், தமிழ் அறிஞர்களின் சிறந்த ஞானம் பற்றியும் பேசி பெருமை கொண்டுள்ளார்.
பறைசாற்றினார்.
ஆக., 15 சுதந்திர தின நிகழ்ச்சியில் பேசுகையில், 'நீல குறிஞ்சியின் சிறப்பு பற்றி பேசி, இந்த விழா காலத்தில், நீலகிரியில், 12 ஆண்டுக்கு ஒரு முறை மலரும், நீல குறிஞ்சி பூத்துள்ளது பெருமையாகும்' என்றார். கடந்த, 2019 செப்., மாதம், ஐ.நா.,வில் உரையாற்றியபோது, 'யாதும் ஊரே; யாவரும் கேளிர்' என்ற, கனியன் பூங்குன்றனாரின் வரிகளை கூறி, தமிழின் பெருமையை உலகறிய பறைசாற்றினார்.
உலகின் பழம் பெரும் மொழி
'மோடி தமிழகத்தின் பா.ஜ.,வை பலப்படுத்த வேண்டி, 'அரசியல்' லாபத்துக்கு இவ்வாறு பேசுகிறார்' என்ற விமர்சனம் அரசியல்வாதிகள் மத்தியில் எழுந்தாலும், ஐ.நா., சபை முதல், அமெரிக்கா வரை, நம் செம்மொழியாம் தமிழ் மொழியை அவர் பேசி, பெருமை கொள்ள செய்திருக்கிறார். இது ஒருவேளை அரசியலாக இருந்தாலும், அதில் என்ன தவறு இருக்கிறது.


