உங்களை நாங்கள் நம்ப வேண்டுமா ஸ்டாலின்
உங்களை நாங்கள் நம்ப வேண்டுமா ஸ்டாலின்
உங்களை நாங்கள் நம்ப வேண்டுமா ஸ்டாலின்

நெற்றியில் என்ன ரத்தமா
ஒரு முறை நிகழ்ச்சியொன்றில் பங்கேற்ற முன்னாள் தி.மு.க. - எம்.பி. ஆதிசங்கரின் நெற்றியில் வைத்திருந்த குங்குமம் வியர்வையில் நனைத்து வழிந்தோடியது. இதைக் கண்டு சகித்துக் கொள்ள முடியாத கருணாநிதி அவரை பார்த்து 'நெற்றியில் என்ன அடிபட்டு விட்டதா?
காட்டுமிராண்டித்தனம்
கடந்த 1997ல் தி.மு.க. ஆட்சியின் போது அப்போதைய அமைச்சர் அந்தியூர் செல்வராஜ் பண்ணாரியம்மன் கோவில் குண்டம் விழாவில் தீ மிதித்த படம் ஊடகங்களில் வெளியானது. இதையறிந்த கருணாநிதி திருமண விழா ஒன்றில் பேசும் போது 'தீ மிதிப்பது காட்டுமிராண்டித்தனம்' என்றார்.
ராமர் இன்ஜினியரா
ராமர் பாலம் தொடர்பான சர்ச்சை எழுந்தபோது 'டைம்ஸ் நவ்' ஆங்கில செய்தித் தொலைக்காட்சி நிருபரின் கேள்விக்கு பதிலளித்த கருணாநிதி 'ராமர் என்றொருவர் இருந்ததாகவோ அவர் இன்ஜினியரிங் படித்ததாகவோ அவர் ஒரு பிரிஜ் கட்டியதாகவோ சரித்திரம் இல்லை...' என்று கூறி பல கோடி ஹிந்துக்கள் கடவுளாக வணங்கும் ராமரை அவமதித்தார்.அதற்கு முன் ஒரு முறை 'ஹிந்து என்றால் திருடன்' என்று வியாக்கியானமும் பேசி ஒட்டுமொத்த ஹிந்துக்களையே அநாகரிகமாக விமர்சித்தார் என்பது வேறுவிஷயம்.
திருநீறு அழிப்பு
ஸ்ரீரங்கம் கோவில் வாசலில் கட்சியினர் ஏற்பாடு செய்திருந்த வரவேற்பு நிகழ்ச்சியின்போது தன் நெற்றியில் இடப்பட்ட திருநீற்றை மறுவிநாடியே அழித்துக் கொண்டார் ஸ்டாலின். அதுமட்டுமின்றி தேவர் ஜெயந்தி விழாவில் பங்கேற்ற இவர் அங்கு தனது நெற்றியில் திருநீறு பூச மறுத்து கையிலிருந்ததை உதறி அவமதித்தார்.
ஹிந்து திருமணம் கேவலம்
ஒரு முறை இஸ்லாமியர் திருமண நிகழ்ச்சியில் பங்கேற்ற ஸ்டாலின் மணமக்களை வாழ்த்தி பேசியிருந்தால் பரவாயில்லை. அதைவிடுத்து அந்த மேடையில் ஹிந்துக்களுக்கு எதிராக ஹிந்துக்களின் திருமண நிகழ்வு முறையைக் கொச்சைப்படுத்தும் விதமாக பேசி தனது இந்து விரோத வக்கிரத்தை வெளிக்காட்டினார்.
ஸ்டாலினின் அந்த பேச்சு…
''ஹிந்துக்களின் திருமணத்தின்போது மணமேடையில் மணமக்களுக்கு பக்கத்தில் புரோகிதர் அமர்ந்து திருமணத்தை நடத்தி வைப்பார். மணமக்கள் இடையே நெருப்பை மூட்டி புகை மண்டலத்தை கிளப்புவார். மணமக்கள் கண்ணீர் சிந்துவர். வந்திருப்போரும் கண்ணீர் சிந்த… அங்கு சோகச் சூழ்நிலை உருவாகும். புரோகிதர் ஓதும் மந்திரத்தின் உள் அர்த்தம் தெரிந்தால்… நம் உடம்பெல்லாம் நடுங்கும்; அந்த அளவிற்கு மிக கேவலமான மந்திரம் அது...''
உதயநிதியும் விதிவிலக்கல்ல
கடந்த விநாயகர் சதுர்த்தியின்போது ஸ்டாலின் மகன் உதயநிதி தனது 'டுவிட்டர்' பக்கத்தில் விநாயகர் சிலையை மார்போடு அணைத்திருப்பதைப் போன்ற போட்டோவை பதிவிட்டிருந்தார். பெரும்பான்மையான தி.மு.க.வினர் மத்தியில் வரவேற்பையும் சிலர் மத்தியில் அதிர்ச்சியையும் ஏ ற்படுத்தியிருந்த இந்த பதிவு அவசர அவசரமாக நீக்கப்பட்டது.


