/வாராவாரம்/விருந்தினர் பகுதி/‛கடல் காத்த' கார்த்திகேயன் ஐ.ஏ.எஸ்.,‛கடல் காத்த' கார்த்திகேயன் ஐ.ஏ.எஸ்.,
‛கடல் காத்த' கார்த்திகேயன் ஐ.ஏ.எஸ்.,
‛கடல் காத்த' கார்த்திகேயன் ஐ.ஏ.எஸ்.,
‛கடல் காத்த' கார்த்திகேயன் ஐ.ஏ.எஸ்.,

ஐ.ஏ.எஸ்., வென்றதும், மக்களிடம் சென்றதும் எப்படி... அவரிடம் கேட்டோம்...
சொந்த ஊர் ஈரோடு. எனது அப்பா இன்ஜினியர், அம்மா பி.எட்., படித்த குடும்பத்தலைவி. சென்னை மருத்துவக்கல்லுாரியில் படிக்கும் போது மாணவர் செயலாளராக இருந்தேன். சமூக சேவைகளில் ஈடுபடும் வாய்ப்பு வந்தது. நிறைய ஏழைகள் சிகிச்சைக்கு வருவதை பார்த்தேன். இவர்களின் சமூக மேம்பாட்டிற்கு நாம் எதாவது செய்ய வேண்டும் என்ற எண்ணம் மேலோங்கியது. கூடவே படித்த வாசுகியும் நானும் நண்பர்களானோம். அவரும் சமூக சேவையில் அக்கறை உள்ளவர்.
படகு அனுப்பி பல உயிர்களை காத்தேன்
கேரளாவில் 2018ல் தொடர் மழையால் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. நான் கொல்லம் கலெக்டராக இருந்தேன். பக்கத்து மாவட்டங்கள் பத்தனம்திட்டாவும், ஆலப்புழாவிலும் கிராமங்கள் நீரில் மூழ்கின. பத்தனம்திட்டா கலெக்டர் நள்ளிரவில் பேசினார். நீரில் மூழ்கும் வீடுகளில் இருந்து மக்களை மீட்க வேண்டும்; அதற்கு தீயணைப்புத் துறையின் கூடுதல் படகுகள் வேண்டும் என்றார்.
ஐ.ஏ.எஸ்., ஆவது எப்படி
முயற்சியும், அர்ப்பணிப்பு உணர்வும் இருந்தால் யாரும் ஐ.ஏ.எஸ்., தேர்வு எழுதலாம். ஏதாவது ஒரு டிகிரி போதும். பெரிய அறிவாளியாக, 100க்கு நுாறு மதிப்பெண் எடுப்பவராக இருந்தால் தான் எழுத முடியும் என்பதில்லை. பொது அறிவு, மக்களோடு பழகும் தன்மை, எந்த பிரச்னையையும் எதிர்கொண்டு சமாளிக்கும் திறன் இருக்கிறதா என்று தான் பரிசோதிக்கிறார்கள்.


